RECENT NEWS

கனடாவிலும் விரட்டப்படும் அபாயம்... நம்மாளுங்களுக்கு நேரம் சரியில்லையோ?

இந்தியா

வீட்டில் கட்டுக்கட்டாக பணம் இருந்த விவகாரத்தில் நீதிபதி மீதான விசாரணை தீவிரம்

Mar 23, 2025 02:09 AM

104

வீட்டில் கட்டுக்கட்டாக பணம் இருந்த விவகாரத்தில் நீதிபதி மீதான விசாரணை தீவிரம்

டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் கோடிக்கணக்கான ரூபாய் கண்டறியப்பட்ட விவகாரம் குறித்து விசாரணை நடத்த, 2 தலைமை நீதிபதிகள் உள்பட 3 நீதிபதிகள் கொண்ட குழுவை, உச்சநீதிமன்றம் அமைத்துள்ளது.

தீ விபத்து மற்றும் நீதிபதி மீதான குற்றச்சாட்டு குறித்து, டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தேவேந்திர குமார் உபத்யாயா தாக்கல் செய்த விசாரணை அறிக்கையும், யஷ்வந்த் வர்மாவின் பதில் அறிக்கையும் மற்றும் கட்டுக்கட்டாக பணம் பாதி எரிந்த நிலையில் உள்ள வீடியோவும், உச்சநீதிமன்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

தற்போதைய நிலையில் நீதிபதி யஷ்வந்த் வர்மாவுக்கு, நீதித்துறை சார்ந்து எந்தப் பணிகளும் வழங்க வேண்டாமென, டெல்லி உயர்நீதிமன்றத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிபதி தனது போனில் உள்ள எந்த ஒரு அம்சத்தையும் அழித்து விடக்கூடாது என்று எச்சரித்துள்ள உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சிவ் கண்ணா, நீதிபதி, அவரது வீட்டுப் பணியாளர்கள் உள்ளிட்டோரின் 6 மாத செல்போன் எண் பயன்பாடு பட்டியலை சேகரிக்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.  

SHARE

shareshareshareshare

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

ஆட ஆட உயிர்போவது ஏன்? நடனமாடும்போது இதயத்தில் என்ன நடக்கும்?
யாரெல்லாம் டான்ஸ் ஆடக்கூடாது?

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies