முகப்பு
கனடாவிலும் விரட்டப்படும் அபாயம்... நம்மாளுங்களுக்கு நேரம் சரியில்லையோ?
Mar 25, 2025 02:13 PM
93
என்ன அதிகாரம்? யாருக்கு அதிகாரம்? யாருக்கு பாதிப்பு? இந்தியர்களுக்கு மட்டும்தான் பாதிப்பா?
அமெரிக்காவுக்கு அடுத்து அயல்நாடு என்றால் பலரும் டக்கென கிளிக் செய்யும் நாடுகளில் ஒன்று கனடா. ஆனால் அங்கு வாழும் லட்சக்கணக்கான இந்தியர்களை ‘நம்பள முடிச்சு விட்டுட்டீங் போங்’ என புலம்ப வைச்சிருக்கு ஒரு புதிய அறிவிப்பு. . என்னதான் ஆச்சு நம்ம நாட்டவருக்கு? போற இடத்துலெல்லாம் விரட்டப்படுறாங்களே. . ஏன் ? என இந்த செய்தியில பார்க்கலாம். . .
கடன வாங்கியாச்சும் கனடா போய் செட்டில் ஆகனும் என நினைப்புல இருக்குறவங்க கனவுகளுக்கு ரெட் சிக்னல் போடுவது மட்டுமல்ல. அங்கு வசிப்பவர்களையே எந்நேரமும் நாட்டை விட்டுச் செல்லும்படி உத்தரவிடும் அதிகாரத்தை அதிகாரிகளுக்கு வழங்கி திணறடிக்கிறது அந்நாடு.
என்ன அதிகாரம்?
அயல்நாட்டவரை எப்போது வேண்டுமானாலும் நாடு கடத்த முடியும் என்பது தான் அந்த அதிகாரம். இது அமெரிக்காவில் உள்ளது போன்று சட்டவிரோத குடியேறிகளுக்கானது மட்டுமல்ல. கனடாவிற்குள் செல்ல அனுமதியோடு விசா பெற்றபோதும் அவர்கள் நினைத்தால் திருப்பி அனுப்ப முடியும்.
யாருக்கு அதிகாரம்?
கனடாவில் எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தடையற்ற ஒரு பவரை வழங்கியிருக்கிறது கனடா அரசு. Electronic Travel Authorisations, Temporary Resident Visa என அந்நாட்டில் தற்காலிகமாக வசிக்கும் யாரை வேண்டுமானாலும் நாட்டை விட்டு அனுப்பும் அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறது.
யாருக்கு பாதிப்பு?
கனடாவில் படிப்புக்காகவும், பணிக்காகவும் முறையாக விசா பெற்று சென்று வசிக்கும் லட்சக்கணக்கான இந்தியர்கள் இந்த உத்தரவால் பாதிக்கப்படுவார்கள். இதில் தற்போது மாணவர்கள் மட்டுமே 4 லட்சத்து 20 ஆயிரம் பேர் கனடாவில் படித்து வருகின்றனர்.
நாடுகடத்தப்படுவது ஏன்?
ஒருவர் அவருக்கு அனுமதிக்கப்பட்ட காலத்தை விட அதிகமாக கனடாவில் தங்கிவிடுவாரா? என அதிகாரிகள் ஆய்வு செய்வர். அப்போது அவர் ஏற்றுக் கொள்ளும்படியான காரணத்தை வழங்கவில்லை என்றாலோ, அல்லது அந்த அயல்நாட்டவரின் பதிலில் அதிகாரிக்கு திருப்தி இல்லை என்றாலோ அவர் நாடுகடத்தப்பட வாய்ப்புள்ளது.
பாதிப்பு என்ன?
கனடாவில் படித்து வருபவர்கள் திடீரென நாடுகடத்தப்பட்டால் படிப்பை பாதியில் நிறுத்தக்கூடும். இது கனடாவில் படிப்பதற்காக கடன் வாங்கி அங்கு சென்றவர்களின் நிலையை மேலும் கேள்விக்குறியாக்கும். அங்கு பணி செய்பவர்கள் திடீரென நாடுகடத்தப்பட்டால் அவர்களின் வருமானம் கேள்விக்குறியாகும்.
அதோடு அவர்கள் வாங்கிய சொத்து, அவர்கள் வைத்திருக்கும் வங்கிக் கணக்கு ஆகியவையும் முடங்கிவிடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. அங்கு தற்காலிக குடியிருப்பு அனுமதியில் தங்கியிருப்போர் செய்யும் தொழில், பணியாளர்களுக்கும் தங்களது தங்கும் இடத்துக்கும் கொடுத்திருப்பதற்கான இருப்புத் தொகை என பல வகைகளிலும் பொருளாதார இழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.
இந்தியர்களுக்கு மட்டும்தான் பாதிப்பா?
என்றால் இல்லை. ஏனெனில் அங்கு இந்தியர்கள் அதிக எண்ணிக்கையில் இருந்தாலும் பிற அயல்நாட்டவர்களுக்கும் இந்த அதிரடி அறிவிப்பால் பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu