முகப்பு
‘என்ன வேணா நடக்கலாம்! சோறு, தண்ணி இருப்பு வையுங்க’ எந்த நாடுகளுக்கு இந்த வார்னிங்?
Mar 25, 2025 11:09 AM
84
‘சோறு, தண்ணி இருப்பு வையுங்க’ எந்த நாடுகளுக்கு இந்த வார்னிங்?
‘சோறு தண்ணியெல்லாம் தீரப்போகுது. சேமிச்சு வெச்சுக்கோங்க’ என சேதி வந்ததும் பரபரப்பாகின 3 நாடுகள். .
சூப்பர் மார்க்கெட்களில் இருந்த அத்யாவசியப் பொருட்கள் வீடுகளின் ஃப்ரிட்ஜ்களில் நிரம்பிவழிந்தன.
நமது ஊர்களில் முன்பெல்லாம் பல நாட்கள் கழித்து தண்ணீர் வரும்போது அண்டா முதல் டம்ளர் வரை நிரப்பிவைப்போமே. அதுபோன்று மோட்டார் போட்டு இரைத்து கிடைக்கும் பாத்திரங்களில் எல்லாம் நீரைச் சேமித்தனர்.
அதுமட்டுமின்றி பலரும் ஜெனரேட்டர்களையும், எரிபொருட்களையும் கூட வாங்கி நிரப்பிவிட்டனர். ஏதோ அசம்பாவிதம் நடக்கப் போகிறது எனவெல்லாம் அஞ்சினர் மக்கள்.
இப்படியெல்லாம் செய்திகள் வருகின்றன. ஆனால், உண்மை என்ன தெரியுமா? அந்த நாடுகளின் மக்கள் அச்சத்தில் இல்லை. சந்தோஷத்தில்தான் உள்ளனராம்.
இன்னும் சொல்லப்போனால், ‘நட்ட நடு ராவச்சு நட்ட விதை பூவாச்சு பொன்னம்மா. .’ என்ற இந்தியன் பட சுதந்திரப் பாடல் வரியில் வருவதுபோல் முழுமையான சுதந்திரத்தை சுவாசத்திலும் உணர்வதாக பூரித்துக் கிடக்கின்றனர் அந்நாடுகளின் மக்கள்.
அவைதான் ரஷ்யாவின் எல்லையை ஒட்டியிருக்கும் எஸ்டோனியா, லாட்வியா, லிதுவானியா ((Estonia, Latvia, Lithuania)) நாடுகள்.
இவை,30 ஆண்டுகளுக்கு முன்பே சோவியத் யூனியனில் இருந்து வெளியேறிவிட்டன. இருப்பினும் தொப்புள்கொடி உறவுபோல் பிரியாமல் மின்கம்பி வடங்கள் மூலம் இந்த 3 தேசங்களுக்கும் - ரஷ்யாவுக்கும் இடையிலான உறவு தொடர்ந்தது.
இடை இடையே அந்த உறவில் சில மனக்கசப்புக்கள் வந்தன. இதனால் அவர்கள் ‘மின்சாரத்துக்கு மட்டும் எதுக்கு உங்கள நம்பி இருக்கனும். நாங்க வேற தேசத்தைப் பாத்துக்குறோம்’ என ஐரோப்பியாவுடன் கைகோர்த்தன.
இதையடுத்து இப்போது முழுமையான மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுவிட்டது. ரஷ்யா மின்சாரத்தை வழங்குவதை நிறுத்தியது. மின் இணைப்புக்களுக்கான கம்பிவடங்களையும் கட் செய்த புகைப்படங்களை மகிழ்ச்சியாக வெளியிட்டன இந்த 3 நாடுகள்.
ஒரு நாள் முழுக்க தங்களது மின் சேமிப்பகத்தை மட்டும் நம்பி இந்த 3 தேசங்களும் மின் தேவையை தீர்த்தன. ஆனால், அடுத்த 2 நாட்களுக்கு மேல் தாங்காது என்ற நிலைவந்ததாகக் கூறித்தான் இப்படிப்பட்ட வதந்திகள் வரத்தொடங்கின. அதையும் கிளப்பிவிட்டது ரஷ்யா தரப்புதான் என அந்நாட்டு ஊடகங்கள் சில குற்றம்சாட்டின.
ஏதோ நம்ம வீட்ல மட்டும் கரண்ட் கட்டானதும் பக்கத்துவீட்டின் EB பாக்ஸில் உடனே கனெக்ட் செய்வது போல அவ்வளவு எளிதானது அல்ல.
2018-ல் ஐரோப்பாவுடன் டீல் போட்டு 7 ஆண்டுகளாக இணைப்புப்பணிகள் மேற்கொண்டு பரிசோதனைகள் முடிந்தபின்பே மின்விநியோகம் வெற்றிகரமாகத் தொடங்கியுள்ளது.
அந்நாடுகளை சும்மாவா விட்டது ரஷ்யா? என்றால் இல்லை. ரஷ்யாவின் பதிலடிக்குத் தயாராக இருக்க வேண்டும் ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா இந்த 3 நாடுகளுக்கும் கூறியுள்ளார்.
போர் அளவுக்கு இல்லாவிட்டாலும், சிண்டு முடிவதுபோல் சிற்சிறிய வேலைகளைப் பார்த்து வருகிறதாம்.
ஷேடோ ஃப்ளீட் ((Shadow Fleet)) என்ற ரஷ்யக் கப்பல் கடந்த 18 மாதங்களில் எஸ்டோனியாவையும் - ஐரோப்பாவையும் இணைக்க கடலுக்கடியில் பதிக்கப்பட்ட 11 மெய்ன்லைன் மின் கேபிள்களை துண்டித்ததாகக் குற்றம்சாட்டிள்ளார் உர்சுலா.
இதைத் தடுக்க பால்டிக் கடற்பகுதியில் தீவிர ரோந்தில் ஈடுபட வேண்டும் என திட்டமிட்டுள்ளன அந்நாடுகள். உக்ரைன் போரிலும் ரஷ்யாவுக்கு எதிராக இந்த நாடுகள் பேசி வந்ததுகூட ரஷ்யாவின் கோபத்துக்குக் காரணம் என கணிக்கப்படுகிறது.
ஆனால், என்ன. . இத்தனை நாட்கள் குறைந்த விலையில் ரஷ்யா கொடுத்து வந்த மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் மக்களுக்கு சற்றே மின் கட்டண உயர்வு வரலாம் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.
எனினும் இது ரஷ்யாவுக்கு ஒரு பூலோக ரீதியான அரசியல் இழப்பு என சைன்ஸ் டைரக்ட் நடத்திய ஆய்வில் சுட்டிக்காட்டியுள்ளது.
சைபர் அட்டாக், கேபிள்களை கட் செய்வது போன்ற சின்னச் சின்ன சீண்டல்கள் தான் தருமே தவிர உக்ரைனுக்கு எதிரான நிலைப்பாடு போன்று ஏதும் பெரிய முடிவுகளை ரஷ்யா எடுக்காது எனவும் அந்த ஆய்வு கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu