பெண் வேடமணிந்து தீபம் ஏற்றி வழிபட்ட ஆண்கள்
Mar 26, 2025
ஆண் நண்பருடன் சேர்ந்து கணவனைக் கொன்ற மனைவி
Mar 26, 2025
தமிழ்நாடு
“சுந்தரி கண்ணால் ஒரு சேதி” மூன்றாவது காதலனை கொல்ல முதல் இரு காதலன்களுடன் ஸ்கெட்ச்..! ஒரு பெண்ணுக்கு இத்தனை போட்டியா ?!
Mar 23, 2025 01:25 AM
587
விருதுநகர் மாவட்டம், திருத்தங்கல் அருகே வீடுபுகுந்து ரவுடி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் ஏற்கனவே 5 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், கொலைக்கு இன்ஸ்டாகிராமில் ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்த காதலி உள்ளிட்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இப்பல்லாம் இன்ஸ்டாகிராமை சகலத்துக்கும் பயன்படுத்துறாய்ங்க போல என்று சொல்லும் அளவுக்கு, ரவுடிக்கு மது ஊற்றிக் கொடுத்து இன்ஸ்டாகிராம் மூலமாக கூலிப்படைக்கு போட்டுக் கொடுத்து கொலைக்கு மூளையாக இருந்ததாக கைது செய்யப்பட்டுள்ளார் பெண் ஒருவர்.!
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே திருத்தங்கல் ஆலாவூரணியை சேர்ந்தவர் சுரேஷ். இவர் மீது 3 கொலை வழக்கு உட்பட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. இவருக்கும் சிவகாசி முனீஸ்நகரை சேர்ந்த திருமணமாகி கணவரை பிரிந்து வாழும் சுந்தரி என்பவருக்கும் காதல் ஏற்பட்டு இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் கணவன் மனைவியாக வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 16ம் தேதி இரவு சுந்தரி வீட்டில் சுரேஷ் தங்கியிருந்த போது, திடீரென அங்கு வந்த 5 பேர் கொண்ட கும்பல் அவரை சரமாரியாக வெட்டி படுகொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியது.
இச்சம்பவம் குறித்து மாரனேரி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்தனர். கொலை செய்யப்பட்ட சுரேஷ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் திருத்தங்கல் நெல்லுகுத்துப்பாறையை சேர்ந்த குணசேகரன் என்பவரை கொலை செய்த வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளி வந்தவர் என்பது தெரியவந்தது. அந்த கொலைக்கு பழிக்கு பழியாகவே கொல்லப்பட்ட குணசேகரனின் தம்பி மதனகோபால் கூட்டாளிகளுடன் இணைந்து சுரேஷை தீர்த்துக்கட்டியது தெரியவந்தது. கடந்த 18ம் தேதி மதனகோபால் , கூட்டாளிகளான தனசேகரன் , சூர்யபிரகாஷ் , தருண் , முத்துப்பாண்டி ஆகிய 5 பேரை கைது செய்தனர்.
கைதான 5 பேரிடம் கொல்லப்பட்ட ரவுடி சுரேஷ், காதலி சுந்தரி வீட்டில் தான் இருக்கிறான் என்று அந்த நள்ளிரவில் உங்களுக்கு தகவல் தெரிவித்தது யார்? என்று போலீசார் நடத்திய விசாரணையில், சுரேஷுக்கு சுந்தரியே வில்லியானது அம்பலமானது. இதையடுத்து சுந்தரி, அவரது ஆண் நண்பர் வேலுச்சாமி ஆகியோரை பிடித்து விசாரித்தனர். அவர்கள் கொலையை அரங்கேற்ற சினிமாவை மிஞ்சும் அளவிற்கு பிசிறு தட்டாமல் தீட்டிய சதி செயல் வெளிச்சத்திற்கு வந்தது.
கணவனை பிரிந்து தனியாக வாழ்ந்து வரும் சுந்தரிக்கு ரவுடி சுரேஷுக்கு முன்னதாகவே வேலுச்சாமி , தருண் என இருவருடனும் கொடுக்கல் வாங்கல் காதல் இருந்துள்ளது. ரவுடி சுரேஷ், அடிக்கடி சுந்தரி வீட்டிற்கு வந்து தங்கி செல்வதால் வேலுச்சாமியும், தருணும் சுந்தரியை சந்திக்க முடியாமல் கண்ணால் மட்டுமே சேதி சொல்லி செல்லும் நிலை ஏற்பட்டதால் சுரேஷ் மீது ஆத்திரத்தில் இருந்துள்ளனர். இதனால் சுரேஷை தீர்த்துக்கட்ட மதன கோபாலுடன் கை கோர்த்ததாக கூறப்படுகின்றது.
ஏற்கனவே தனது சகோதரர் குணசேகரன் கொலைக்கு பழிக்குப்பழி வாங்க காத்திருந்த மதன கோபாலுக்கு சுரேஷின் காதலியான சுந்தரியும், அவரது ஆண் நண்பர் வேலுச்சாமியும் ஸ்கெட்ச் போட்டு கொடுத்ததாக சுட் இதன்படி சம்பவத்தன்று அதிக மது போதையில் சுந்தரியின் வீட்டிற்கு வந்த சுரேஷிக்கு கூடுதலாக மது ஊற்றி கொடுத்து வீட்டில் பிளாட்டாக்கியுள்ளார் சுந்தரி, தனது இன்ஸ்டா காதலன் தருணுக்கு இன்ஸ்டாகிராம் மெசேஞ்சர் மூலமும், வாட்ஸ் அப் காதலன் வேலுச்சாமிக்கு செல்போன் மூலமும் சுரேஷ் புல் போதையில் மட்டையாகி கிடப்பதாக தகவல் தெரிவித்துள்ளார்.
இதன்படி சம்பவத்தன்று அதிக மது போதையில் சுந்தரியின் வீட்டிற்கு வந்த சுரேஷிக்கு கூடுதலாக மது ஊற்றி கொடுத்து வீட்டில் பிளாட்டாக்கியுள்ளார் சுந்தரி, தனது இன்ஸ்டா காதலன் தருணுக்கு இன்ஸ்டாகிராம் மெசேஞ்சர் மூலமும், வாட்ஸ் அப் காதலன் வேலுச்சாமிக்கு செல்போன் மூலமும் சுரேஷ் புல் போதையில் மட்டையாகி கிடப்பதாக தகவல் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து வேலுச்சாமியின் தகவலின் பேரில் தருண் , மதன கோபால் உள்ளிட்ட 5 பேர் கும்பல் சுந்தரியின் வீட்டிற்கு சென்றுள்ளது. அங்கு போதையில் படுத்து தூங்கிக் கொண்டு இருந்த சுரேஷை சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பிச்சென்றது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக வேலுச்சாமியும் சுந்தரியும் போலீசாரல் கைது செய்யப்பட்டனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu