முகப்பு
முடிவுக்கு வருகிறதா உக்ரைன் போர்?.... டிரம்பால் வரப்போகும் நல்ல சேதி
Mar 25, 2025 11:02 AM
60
முடிவுக்கு வருகிறதா உக்ரைன் போர்?... டிரம்பால் வரப்போகும் நல்ல சேதி
2022-ல் ஜோ பைடனுடனான பேச்சுவார்த்தைக்குப் பின் உக்ரைனுக்குள் ஊடுருவித் தாக்கத் தொடங்கியது விளாடிமிர் புதினை அதிபராகக் கொண்டிருக்கும் ரஷ்யா.
அன்றுமுதல் மரண ஓலங்கள், பிஞ்சுக் குழந்தைகளின் கதறல்கள், வெடிகுண்டு சத்தங்கள் . . என 3 ஆண்டாகியும் ஓய்ந்தபாடில்லை.
ரஷ்யாவுக்குள்ளும் ஊடுருவி பதில் தாக்குதல் நடத்தி வருகிறது உக்ரைன். இதுக்கு ஒரு எண்டே கிடையாதா? என ஏக்கப்பட்டுப் போன உலக மக்களுக்கு ஒரு நல்லகாலம் வருவதாக சேதி. .
‘டீல்களின் அரசன்’ எனப் புகழப்படும் அமெரிக்க அதிபர் டிரம்ப் ரஷ்ய அதிபர் புதினோடு பேசியதாக அமெரிக்க அதிபர் நியூயார்க் போஸ்ட் நிறுவனத்திடம் கூறியிருக்கிறார். எத்தனை முறை பேச்சுவார்த்தை நடந்தது என்ற தகவலை வழங்க மறுத்துவிட்டார்.
இருந்தபோதும், ‘‘தினம் தினம் மக்கள் சாகிறார்கள். போரை முடிந்த வரை சீக்கிரம் நிறுத்த வேண்டும். மக்கள் சாகாமல் இருக்கும் நாளைப் பார்க்க வேண்டும்” என்ற தனது விருப்பத்தை ரஷ்ய அதிபர் புதினிடம் தெரிவித்ததாகக் கூறியிருக்கிறார்.
ஆனால், அதிபர் புதினின் க்ரெம்ளின் மாளிகையோ இந்தப் பேச்சுவார்த்தை நடந்ததை ‘ஒப்புக்கொள்ளவுமில்லை, மறுக்கவுமில்லை’ என நழுவலான பதிலையே கொடுத்திருக்கிறது.
டிரம்புடன் நடந்த பேச்சுவார்த்தையில் ‘ரஷ்ய எல்லையில் கைப்பற்றிய பகுதிகளில் இருந்து உக்ரைன் ராணுவத்தினர் வெளியேற வேண்டும், நேட்டோ கூட்டமைப்பில் உக்ரைன் இணையக்கூடாது’ என்றெல்லாம் ரஷ்யா டிமேண்டுகள் வைத்திருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது.
அடுத்த வாரம் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடனும் பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறாராம் அமெரிக்க அதிபர் டிரம்ப்.
முன்னதாக டிரம்பிடம் போர் நிறுத்த டீல் பேசத்தான் தானும் காத்திருப்பதாகக் கூறியிருக்கிறார் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி. தங்கள் நாட்டின் அரிய தாதுக்களை அமெரிக்கா விலைக்கு வாங்கிக் கொண்டு, போரால் பாதித்த தங்கள் நாட்டுக்கு பொருளாதாரத்தை முன்னேற்ற உதவ வேண்டும் என அவர் ராய்டர்ஸ் நிறுவனம் மூலம் கோரிக்கை விடுத்திருக்கிறார்.
அத்துடன் ஐரோப்பாவில் உக்ரைனுக்குச் சொந்தமாக இருக்கும் மிகப்பெரிய நிலத்தடி கேஸ் சேமிப்பகத்தை கான்ட்ரேக்ட் மூலம் பயன்படுத்துவது பற்றியும் ஒரு டிமேண்ட் வைத்திருக்கிறார்.
புதினை சந்திக்கும் முன் என்னை முதலில் சந்திக்க வேண்டும் எனவும் ஜெலன்ஸ்கி டிரம்புக்கு கோரிக்கை விடுத்திருக்கிறார். இல்லாவிட்டால் இது உக்ரைனுக்கும் - உக்ரைனுக்கும் மட்டுமே நடக்கும் பேச்சுவார்த்தை போல் ஆகிவிடும் என்றும் கேட்டிருக்கிறார் ஜெலன்ஸ்கி.
அவரது டிமேண்ட்களையும் கேட்டுவிட்டு டிரம்ப் உக்ரைன் போருக்கு ‘சுபம்’ என ஒரு எண்டு கார்டு போடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Bottom Card
(( முடிவுக்கு வருகிறதா உக்ரைன் போர்?
டிரம்பால் வரப்போகும் நல்ல சேதி
2022-ல் ஜோ பைடனுடனான பேச்சுவார்த்தைக்குப் பின் உக்ரைனுக்குள் ஊடுருவித் தாக்கத் தொடங்கியது விளாடிமிர் புதினை அதிபராகக் கொண்டிருக்கும் ரஷ்யா.
அன்றுமுதல் மரண ஓலங்கள், பிஞ்சுக் குழந்தைகளின் கதறல்கள், வெடிகுண்டு சத்தங்கள் . . என 3 ஆண்டாகியும் ஓய்ந்தபாடில்லை.
ரஷ்யாவுக்குள்ளும் ஊடுருவி பதில் தாக்குதல் நடத்தி வருகிறது உக்ரைன். இதுக்கு ஒரு எண்டே கிடையாதா? என ஏக்கப்பட்டுப் போன உலக மக்களுக்கு ஒரு நல்லகாலம் வருவதாக சேதி. .
‘டீல்களின் அரசன்’ எனப் புகழப்படும் அமெரிக்க அதிபர் டிரம்ப் ரஷ்ய அதிபர் புதினோடு பேசியதாக அமெரிக்க அதிபர் நியூயார்க் போஸ்ட் நிறுவனத்திடம் கூறியிருக்கிறார்.
எத்தனை முறை பேச்சுவார்த்தை நடந்தது என்ற தகவலை வழங்க மறுத்துவிட்டார்.
‘‘தினம் தினம் மக்கள் சாகிறார்கள். அதை முடிந்த வரை சீக்கிரம் நிறுத்த வேண்டும். மக்கள் சாகாமல் இருக்கும் நாளைப் பார்க்க வேண்டும்” புதினிடம் கூறிய டிரம்ப்
அதிபர் புதினின் க்ரெம்ளின் மாளிகையோ இந்தப் பேச்சுவார்த்தை நடந்ததை ‘ஒப்புக்கொள்ளவுமில்லை, மறுக்கவுமில்லை’ என நழுவலான பதிலையே கொடுத்திருக்கிறது.
‘ரஷ்ய எல்லையில் கைப்பற்றிய பகுதிகளில் இருந்து உக்ரைன் ராணுவத்தினர் வெளியேற வேண்டும், நேட்டோ கூட்டமைப்பில் உக்ரைன் இணையக்கூடாது’ - ரஷ்யா டிமேண்டுகள் என தகவல்
அடுத்த வாரம் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடனும் பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறாராம் அமெரிக்க அதிபர் டிரம்ப்.
முன்னதாக டிரம்பிடம் போர் நிறுத்த டீல் பேசத்தான் தானும் காத்திருப்பதாகக் கூறியிருக்கிறார் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி.
தங்கள் நாட்டின் அரிய தாதுக்களை அமெரிக்கா விலைக்கு வாங்கிக் கொண்டு, போரால் பாதித்த தங்கள் நாட்டுக்கு பொருளாதாரத்தை முன்னேற்ற உதவ வேண்டும் - ஜெலன்ஸ்கி
அத்துடன் ஐரோப்பாவில் உக்ரைனுக்குச் சொந்தமாக இருக்கும் மிகப்பெரிய நிலத்தடி கேஸ் சேமிப்பகத்தை கான்ட்ரேக்ட் மூலம் பயன்படுத்துவது பற்றியும் ஒரு டிமேண்ட் வைத்திருக்கிறார்.
புதினை சந்திக்கும் முன் என்னை முதலில் சந்திக்க வேண்டும் எனவும் ஜெலன்ஸ்கி டிரம்புக்கு கோரிக்கை விடுத்திருக்கிறார்.
இல்லாவிட்டால் இது உக்ரைனுக்கும் - உக்ரைனுக்கும் மட்டுமே நடக்கும் பேச்சுவார்த்தை போல் ஆகிவிடும் என்றும் கேட்டிருக்கிறார் ஜெலன்ஸ்கி.
உக்ரைன் டிமேண்ட்களையும் கேட்டுவிட்டு டிரம்ப் உக்ரைன் போருக்கு ‘சுபம்’ என ஒரு எண்டு கார்டு போடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu