RECENT NEWS

இயற்கை உபாதை கழிக்க ஏரிக்கு சென்றபோது தண்ணீரில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழப்பு

தமிழ்நாடு

அரசுப் பள்ளி ஆசிரியையின் சடலத்தை கடித்து வெளியே இழுத்து வந்த தெருநாய்..! கோவையில் நடந்தது என்ன ?

Mar 20, 2025 01:33 AM

2541

அரசுப் பள்ளி ஆசிரியையின் சடலத்தை கடித்து வெளியே 
இழுத்து வந்த தெருநாய்..! கோவையில் நடந்தது என்ன ?

அரசுப் பள்ளி ஆசிரியையின் சடலத்தை கடித்து வெளியே இழுத்து வந்த தெருநாய்..! கோவையில் நடந்தது என்ன ?

கோவையில் அரசுப் பள்ளி ஆசிரியை மாயமான நிலையில், முழுமையாக தீயில் எரிந்து கருகிய நிலையில் கிடந்த அவரது சடலத்தை நாய் ஒன்று கடித்து இழுத்து வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை மாவட்டம் மதுக்கரை அருகே வழுக்குப்பாறை அரசுப் பள்ளியில் ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றி வந்தவர் பத்மா. 56 வயதான பத்மா செவ்வாய்கிழமை காலை 11 மணியளவில் தனது ஸ்கூட்டியில் பள்ளிக்கூடத்துக்கு சென்றார். மாலையில் பள்ளிக்கூடம் முடிந்த பின்னரும் பத்மா வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரது குடும்பத்தினர் விசாரித்த போது பத்மா பள்ளிக்கூடத்துகே வரவில்லை என்பது தெரியவந்தது.

உடனடியாக ஆசிரியை பத்மா காணவில்லை என்று மதுக்கரை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. ஆசிரியை ஓட்டிச்சென்ற ஸ்கூட்டி நாச்சிப்பாளையம் பகுதியில் அனாதையாக நிற்பதை புதன்கிழமை காலை போலீசார் கண்டுபிடித்தனர். அந்த இரு சக்கரவாகனத்தை ஆசிரியையின் வீட்டில் கொண்டு வந்து சேர்த்த போலீசார் ஆசிரியையை தேடிவருவதாக கூறிச்சென்றனர்.

அடுத்த சிறிது நேரத்தில் நாச்சிப்பாளையத்தில் ஆள் நடமாட்டம் இல்லாத குப்பை கிடங்கு பகுதியில் தீயில் எரிந்த நிலையில் கரிக்கட்டை போல கிடந்த சடலம் ஒன்றை தெரு நாய் கவ்வி இழுத்துச்செல்வதாக போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து சென்ற போலீசார் அந்தப்பகுதியில் கருகிய நிலையில் கிடந்த சடலத்தை கைப்பற்றி விசாரித்தனர்.

காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் அங்கு கருகிக்கிடந்தவர் மாயமான ஆசிரியை பத்மா என்பது தெரியவந்தது. அவர் சடலமாக கிடந்த 500 மீட்டருக்கு முன்பாகத்தான் அவரது இரு சக்கரவாகனம் மீட்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். ஆனால் அருகில் பெட்ரோல் கேனோ, மண்ணெண்ணெய் பயன்படுத்தியதற்கான தடயமோ சிக்கவில்லை , மதுபாட்டில்களும் சந்தேகத்துக்கு இடமான தடயங்களும் கிடைக்கவில்லை. இதனால் அந்த இடம் முழுவதையும் சீல் வைத்து தடயங்களை தேடி வருகின்றனர்.

பத்மாவின் குடும்பத்தினரிடம் நடத்திய விசாரணையில், அவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருப்பது தெரியவந்தது. பள்ளிக்கூடத்தில் விசாரித்த போது அவருக்கு எந்த ஒரு மன ரீதியான பிரச்சனையும் இல்லை என்றும் சக ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் சம்பவம் நடந்த இடத்தில் நேரில் சென்று ஆய்வு செய்து விட்டு பின்னர் செய்தியாளர்களிடம் கூறும்போது, இது சந்தேக மரணம் என்ற அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. பத்மா செவ்வாய்கிழமை காணாமல் போனதாக அவரது குடும்பத்தினர் புகார் அளித்து இருந்த நிலையில் தீயில் கருகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார், அவருக்கு பல பிரச்சினைகள் இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால், விசாரணை முடிவில் தான் அவரது உயிரிழப்புக்கான உண்மை காரணம் தெரியவரும் என்று தெரிவித்தார். பத்மாவின் செல்போன் மற்றும் பிற மின்னணு சாதனங்களையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்நிலையில் செவ்வாய்கிழமை காலை 11 மணி அளவில் வீட்டில் இருந்து பத்மா தன்னுடைய இருசக்கர வாகனம் மூலம் கிளம்பிச் சென்ற சி.சி.டி.வி. காட்சி யை வைத்து அவர் எங்கே சென்றார் ? அதன் பின்னர் என்ன நடந்தது ? இந்த சம்பவம் கொலையா அல்லது தற்கொலையா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

SHARE

shareshareshareshare

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

அத்தனையும் வெறும் நடிப்பா ?.. கமிஷனுக்காக கண்ணீர்.. ஊரில் காத்திருந்த டுவிஸ்ட்.. நெல் விவகாரத்தில் லஞ்சம் யாருக்கு ?

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies