RECENT NEWS

இளைஞரை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறி செய்த நபர் கைது..

BIG STORIES

அத்தனையும் வெறும் நடிப்பா ?.. கமிஷனுக்காக கண்ணீர்.. ஊரில் காத்திருந்த டுவிஸ்ட்.. நெல் விவகாரத்தில் லஞ்சம் யாருக்கு ?

Mar 22, 2025 01:19 AM

145

அத்தனையும் வெறும் நடிப்பா ?.. கமிஷனுக்காக கண்ணீர்..

மதுரை மாவட்டம் டி.அய்யன்கோட்டையில் நெல் கொள்முதல் செய்ய , மூடைக்கு 60 ரூபாய் லஞ்சம் கேட்பதாக மாவட்ட ஆட்சித்தலைவரிடம், கண்ணீர் விட்டு பரபரப்பை ஏற்படுத்திய விவசாயி, மூடைக்கு 2 ரூபாய் கமிஷன் கேட்டு கிடைக்காததால் புகார் அளித்ததாக கூறி மற்றொரு தரப்பினர் சண்டையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது

மதுரை மாவட்ட ஆட்சி தலைவர் முன்பு கையில், மழையில் முளைத்த நெல்மணிகளுடன் கண்ணீர் மல்க புகார் அளித்த அய்யன்கோட்டை கிராமத்தை சேர்ந்த விவசாயி முருகன் இவர் தான்..!

அரசின் நெல் கொள்முதல் செய்யும் அதிகாரி, தன்னிடம் மூடைக்கு 60 ரூபாய் கமிஷன் கேட்டதாகவும், தான் கொடுக்க மறுத்ததால் தனது நெல்லை மட்டும் கொள்முதல் செய்ய மறுப்பதாகவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்

மாவட்ட ஆட்சித்தலைவர் சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் விசாரணை நடத்த உத்தரவிட்ட நிலையில் முத்துவேல் என்ற அதிகாரி தான் தன்னிடம் லஞ்சம் கேட்டதாக பேட்டியும் அளித்தார் விவசாயி முருகன்

இதையடுத்து விவசாயிகள் படும் வேதனையை அறிய அய்யன்கோட்டை கிராமத்துக்கு சென்று விசாரித்த போது வழி நெடுக ஏராளமாக நெல்மணிகள் அம்பாரமாக குவித்து மூடி வைக்கப்பட்டிருந்தது.

முருகனின் புகார் குறித்து அங்கிருந்த விவசாயிகளிடம் விசாரித்த போது, இரு கட்சியை சேர்ந்தவர்களுக்கு இடையே ஏற்பட்ட கமிஷன் பிரச்சனையால் கடந்த 2 நாட்களாக நெல் கொள்முதல் செய்யாமல் நிறுத்தி வைக்கப்படுவதாக தெரிவித்தனர்

நெல்மணிகள் முளைத்து விட்டதாக கண்ணீருடன் புகார் அளித்த முருகன் பா.ஜ.க வை சேர்ந்தவர் என்று அவரிடம் ஏராளமாக மூட்டை தூக்கும் தொழிலாளர்கள் இருப்பதாகவும் கூறப்படுகின்றது.

மூட்டைக்கு 2 ரூபாய் கமிஷன் கேட்டு முருகன் அதிகாரிகளுக்கு டார்ச்சர் கொடுத்ததாகவும், திமுகவை சேர்ந்தவர்கள் தங்கள் பங்கிற்கு பவரை காட்டியதாகவும் என்ன செய்வதென்று தெரியாமல் விழி பிதுங்கி போன அதிகாரிகளோ , விவசாயிகளிடம் வசூல் செய்து அரசியல் கட்சியினருக்கு கமிஷன் தருவதற்கு பதிலாக, நெல் கொள்முதலையே 2 நாட்களாக நிறுத்தி வைத்ததாக கூறப்படுகின்றது.

இதனால் அதிகாரி முத்துவேல் மீது ஆத்திரம் அடைந்து முருகன், லஞ்ச புகார் அளித்ததாக கூறி அங்கிருந்த விவசாயிகள் முருகனுடன் சென்ற ஆதரவாளரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்

வாக்குவாதம் ஒருவர் மாற்றி ஒருவர் கொலை மிரட்டல் விடும் அளவுக்கு சென்றதோடு, உங்கள் தலைவரை வரச்சொல்லு.. என்று சவால் விட்டும் சண்டையிட்டுக் கொண்டனர்.

உயர் அதிகாரி கண்காணிப்பில், இடைத்தரகர்கள் இன்றி கமிஷன் பெறாமல் விவசாயிகளிடம் விரைவாக நெல் கொள்முதல் செய்ய மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு

SHARE

shareshareshareshare

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

“சுந்தரி கண்ணால் ஒரு சேதி” மூன்றாவது காதலனை கொல்ல  முதல் இரு காதலன்களுடன் ஸ்கெட்ச்..! ஒரு பெண்ணுக்கு இத்தனை போட்டியா ?!

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies