முகப்பு
பிறப்பிலயே ஆட்டோமெடிக் ஆ குடியுரிமை கிடைக்கலன்னா? அடுத்து என்ன பண்ணனும்?
Mar 25, 2025 11:53 AM
43
‘நம்ம புள்ள பொறக்குற தேசத்துலயே அந்நியமாகிப் போயிடுமோ’ன்னு அச்சத்தில இருக்காங்க
‘நம்ம புள்ள பொறக்குற தேசத்துலயே அந்நியமாகிப் போயிடுமோ’ன்னு அச்சத்தில இருக்காங்க அமெரிக்க தேசத்துல குடியுரிமை இல்லாம இருக்குற கர்ப்பிணிகள். அவர்களுக்கு ஆறுதல் தர்ற விஷயமா கருத்து தெரிவிச்சுட்டு வர்றாங்க அந்நாட்டு நீதிபதிகள். .
அவங்களுக்கு சாதகமாவும், சட்டத்த மதிக்க மாட்டேங்குறார் டிரம்புன்னு குற்றம்சாட்டியும் 3- ஃபெடரல் ஜட்ஜும் குட்டு வெச்சுருக்காங்க. பிறப்பிலயே ஆட்டோமெடிக் ஆ குடியுரிமை கிடைக்கலன்னா? அடுத்து என்ன பண்ணனும்? என்பதை விவரிக்குது இந்த செய்தித் தொகுப்பு.
அமெரிக்க மண்ணுல பிறந்தாலே அந்நாட்டோட சிட்டிசன்ஷிப் ஆட்டோமெடிக் ஆ கிடைக்கும். இதுதான் கிட்டத்தட்ட 150 ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்காவுல இருக்குற எழுதப்பட்ட விதி. அந்நாட்டுக்கு அடிமையா பணியாற்ற வந்து குழந்தை பெத்துக்கிட்டவங்களுக்காகத் தொடங்கப்பட்டு இப்போது வரை பின்பற்றப்பபட்டு வருது.
ஆனா, ‘அதெல்லாம் முடியாது, ஒரே எக்ஸிக்யூடிவ் ஆர்டர்-ல கேன்சல் பண்றேன் பாரு’ என முடக்கிவிட்டார் அதிபர் டிரம்ப்.
இதற்கு எதிரா சியாட்டில், மேரிலாண்ட், போஸ்டன், நியூ ஹாம்ஸையர் என பல மாகாணங்களிலும் ஏராளமான வழக்குகள் தொடரப்பட்டு இருக்கு. வழக்கு விசாரிக்கும் 4 ஃபெடரல் நீதிமன்ற நீதிபதிகள்-ல 3 நீதிபதிகள் அமெரிக்க அதிபர் டிரம்பின் உத்தரவுக்கு எதிரான நிலைப்பாட்டிலேயே இடைக்கால உத்தரவுகள பிறப்பிச்சுட்டு வர்றாங்க.
டிரம்போட உத்தரவு அங்க தங்களோட குழந்தை உள்பட குடும்பத்தோட எதிர்காலத்துக்கும் சேர்த்து அமெரிக்காவுலயே நிரந்தரமா இருந்திடலாம்-னு நினைப்பில் இருக்கும் ஏராளமான இந்தியர்களோட கனவ சிதைச்சுருக்கு.
அப்படித்தான் பதற்றத்துல இருக்காங்க அமெரிக்காவில் கலிஃபோர்னியாவின் சான் ஜோஸ் நகரில் 10 ஆண்டுகள் வசித்து வந்த நேஹா சப்டுடேவும், அக்ஷய் பிசேவும். இவர்கள் வரும் 26-ம் தேதி தங்களது முதல் குழந்தையை வரவேற்கக் காத்திருக்கின்றனர்.
அமெரிக்காவுல குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவைத் திருத்த எந்த மாகாணத்துக்கு அதிகாரம் இல்லை. அமெரிக்காவின் எந்த நீதிபதியும் அதிபரின் டிரம்புக்கு ஒப்புதல் தெரிவிப்பதாக இல்லை. எனவே, நான் அதில் முதல் ஆளாக இணையமாட்டேன் என நீதிபதி டெபோரா போர்ட்மேன் (Deborah Boardman) அறிவித்துள்ளார்.
ஆனால் அவர்கள் பிறரைப் போன்று முழுமையான பேறு காலத்துக்கு முன்பே குழந்தையை அறுவை சிகிச்சை செய்து எடுப்பதற்கு மனம் வரவில்லை எனக் கூறியுள்ளனர்.
தனது மனைவிக்கு இயற்கையாக எப்படி பிரசவம் நடக்க வேண்டுமோ, அப்படியே பிரசவம் நடக்கட்டும். அத்தோடு தாய்க்கும் சேய்க்கும் எந்த ரிஸ்கும் இருக்கக் கூடாது என்பதற்காக தான் முன்கூட்டியே சி செக்சன் செய்யும் அறிவுறுத்தலை ஏற்கவில்லை என்றும் கூறியுள்ளார்.
அவர்களின் ஆரோக்யம் தான் முக்கியமே தவிர, சிட்டிசன்ஷிப் எனும் குடியுரிமை இரண்டாம் பட்சம் தான் என பிபிசி-க்கு பேட்டியளித்துள்ளார்.
ஆனாலும் குழந்தை பிறந்த பின், எந்த தேசத்தைச் சேர்ந்தவராக தங்கள் மகன் இருக்கப் போகிறார் என்ற கவலையும் இருப்பதாகக் கூறியிருக்கிறார்.
மருத்துவ ரீதியிலான அவசரத் தேவை இல்லாவிட்டால் முன்கூட்டியே சிசெக்சன் செய்ய மாட்டோம் என மருத்துவ தர்மத்தின் படி நடப்பதாக ஓஹியோவைச் சேர்ந்த சதீஷ் கதுலா
அரசியலமைப்புச் சட்ட ரீதியாக அடிப்படை உரிமைகளைப்பறிப்பது
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu