BIG STORIES
“கேடிஎம் பைக்கில் போனா" இப்படிதான் முறுக்குவியா..?”அடுத்தடுத்து விபத்து ஏற்படுத்திய சம்பவம்
Mar 23, 2025 01:09 AM
338
“கேடிஎம் பைக்கில் போனா" இப்படிதான் முறுக்குவியா..?”அடுத்தடுத்து விபத்து ஏற்படுத்திய சம்பவம்
வேலூர் மாவட்டம் குடியாத்தம் -சித்தூர் சாலையில் அதிவேகமாக கே.டி.எம் பைக்கை ஓட்டி வந்து ஸ்கூட்டி மற்றும் ஆட்டோ மீது மோதி விபத்தை ஏற்படுத்தியதாக கல்லூரி மாணவரை மடக்கிப்பிடித்த பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.
“கண்மூடித்தனமான வேகத்துடன் செல்ல இனி பைக்கை முறுக்குவியா ” ? எனக்கேட்டு கல்லூரி மாணவரை அடித்து உதைத்ததோடு அவர் ஓட்டிச்சென்ற கே.டி.எம் பைக்கை அடித்து நொறுக்கிய சம்பவம் அரங்கேறிய இடம் பிச்சனூர் பேட்டை..!
வேலூர் மாவட்டம் குடியாத்தம் -சித்தூர் சாலையில் பிச்சனூர் பேட்டை பகுதியில் கேடிஎம் பைக்கில் இரண்டு இளைஞர்கள் அதிவேகமாக வந்துள்ளனர் அப்பொழுது சாலையில் இருந்த வேகத்தடையை தாண்டும் போது கட்டுப்பாட்டை இழந்த கே டி எம் பைக் எதிரே வந்த ஸ்கூட்டி மீது மோதியது.
அதில் தனது பத்து வயது மகனுடன் வந்து கொண்டிருந்த கொண்டசமுத்திரம் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி அகிலன் படுகாயம் அடைந்தார். அத்தோடு நிற்காமல் அதி வேகமாகச் சென்ற கேடிஎம் பைக் சாலையில் சென்ற ஆட்டோ மீது மோதியது. அதில் ஆட்டோவில் பயணம் செய்த முனாப் டிப்போ பகுதியைச் சேர்ந்த ஷாயின் என்ற பெண்மணி ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர்.
இதனை பார்த்து கொதித்தெழுந்த பொதுமக்கள் உடனடியாக கேடிஎம் பைக்கில் வந்த இளைஞர்களை சுற்றி வளைத்த போது பாலமுருகன் என்பவர் தப்பி ஓடிவிட்ட நிலையில் புஷ்பராஜ் என்ற கல்லூரி மாணவரை சுற்றி வளைத்து சுளுக்கெடுத்தனர். ஆத்திரம் தாங்காமல், அவர் ஓட்டி வந்த கே.டி.எம் பைக்கையும் அடித்து உடைத்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த குடியாத்தம் நகர காவல் துறையினர் , படுகாயம் அடைந்த அகிலன் மற்றும் ஷாயின் ஆகியோரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் குடியாத்தம் அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
கேடிஎம் பைக்கை ஓட்டி வந்த அரசு கல்லூரி மாணவரை மீட்டு ஆட்டோவில் அழைத்துச்சென்ற போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் குடியாத்தம் சித்தூர் சாலையில் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. போலீசார் போக்குவரத்தை சீர் செய்தனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu