தமிழ்நாடு
கொடூர கொலையை வீடியோ எடுத்ததால் பதறிய பெண்மணி..! கொலைக்கு காரணம் இவரா ?
Mar 20, 2025 01:46 AM
667
கொடூர கொலையை வீடியோ எடுத்ததால் பதறிய பெண்மணி..! கொலைக்கு காரணம் இவரா ?
ஈரோட்டில் பட்டபகலில் மனைவியுடன் காரில் சென்ற ரவுடி மர்மகும்பலால் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். பழக்குப்பழியாக அரங்கேறியதாக சொல்லப்படும் இந்த கோர சம்பவத்தை, விபத்தில் சிக்கியவர்களை மீட்பதாக நினைத்து , காரில் சென்ற பெண் ஒருவர் வீடியோ எடுத்த நிலையில். அது கொலை சம்பவம் என்று உணர்ந்ததும் பதறிபோய் கதறி அழுத வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது
ஈரோட்டில் பட்டப்பகலில் கணவன் மனைவி சென்ற காரை மற்றொரு காரில் வந்து மோதிய ரவுடிக்கும்பல், காருக்குள் இருந்த பெண்ணை இழுத்து வெளியே விட்டு, கணவனை சுற்றிவளைத்து வெட்டிக் கொலை செய்த சம்பவத்தின் குலை நடுங்க செய்யும் காட்சிகள் தான் இவை
மதுரையில் ஆள்மாறட்டத்தில் டிரம்ஸ் இசை கலைஞர் வெட்டிக் கொலை... சென்னை கோட்டூர் புரத்தில் ரவுடிகளால் இரட்டை கொலை.. நெல்லையில் ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளர் ஜாகீர் உசேன் படுகொலை.. வரிசையில் இந்த பட்ட பகல் கொலையும் மக்களை அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் கொலை செய்யப்பட்டது ஜாமீனில் வெளியே வந்த சேலத்தை சேர்ந்த ரவுடி ஜான் என்கிர சாணக்யா என்பது தெரியவந்தது.
சேலம் கிச்சிப்பாளையம் , எஸ். எம். சி. காலனி பகுதியைச் சேர்ந்த 35 வயதான ரவுடி ஜான் மீது சேலம் கிச்சிப்பாளையம் அன்னதானப்பட்டி, செவ்வாய்பேட்டை உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் 3 கொலை வழக்கு , அடிதடி வழக்கு, கொலை முயற்சி வழக்கு உள்ளிட்ட சுமார் 30க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது. கொலை வழக்கில் ஜாமீன் பெற்று வெளியே வந்த ஜாண் , ஈரோடு அருகே தங்கி காவல் நிலையத்தில் தினமும் கையெழுத்திட்டு வந்தான். புதன்கிழமை காலை காவல் நிலையத்தில் கையெழுத்திட காரில் தனது மனைவி ஆதிரா என்கிற சரண்யாவுடன் சென்ற போது, ஈரோடு - கோவை தேசிய நெடுஞ்சாலையில் நசியனூர் அருகே சிலர் ஜானை சராமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி ஓடியது தெரியவந்தது.
இந்த சம்பவத்தை விபத்தில் சிக்கியவர்களை மீட்பதாக நினைத்து , காரில் சென்ற பெண் ஒருவர் வீடியோ எடுத்த நிலையில். அது கொலை சம்பவம் என்று உணர்ந்ததும் பதறிபோய் கதறி அழுதது அவர் எடுத்த வீடியோவில் பதிவாகி உள்ளது
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த சித்தோடு போலீசார் ஜாணின் சடலத்தை கைப்பற்றி பிணகூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் இது பழிக்குபழியாக அரங்கேறிய கொலை என்பது தெரியவந்தது. கொலை செய்யப்பட்ட ஜான் , சேலம் கிச்சிபாளையம் எஸ்.எம்.சி காலனியை சேர்ந்த பிரபல ரவுடிகளான நெப்போலியன் மற்றும் செல்லதுரை ஆகியோருக்கு கூட்டாளியாக இருந்து வந்தான்.
பணம் கொடுக்கல் வாங்கல், கட்டப்பஞ்சாயத்து போன்ற சம்பவங்களை ஜான் தனியே டீல் செய்து வந்துள்ளான் தன்னை ஒரு ரவுடியாக ரீல்ஸ் வீடியோ எல்லாம் வெளியிட்டதால், பிரபல ரவுடிகளான நெப்போலியனும் செல்லதுரையும், ஜானுடன் தகராறு செய்தனர்
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு செல்லதுரையை வெட்டி கொலை செய்ததாக போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட ஜான் உள்ளிட்ட 32 பேரும் சில நாட்களிலேயே ஜாமீனில் வெளியில் வந்தனர். தன்னை எதிர் தரப்பினர் கொலை செய்து விடுவார்கள் என அச்சப்பட்டு திருப்பூரில் உள்ள மாமியார் வீட்டுக்கு சென்று கடந்த ஒன்றரை வருடமாக வசித்து வந்த ஜான், காவல் நிலையத்துக்கு கையெழுத்திட சென்ற போது, செல்லதுரை கொலைக்கு பழிக்கு பழியாக கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
முன்னதாக செல்லதுரை கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட திருச்சியை சேர்ந்த கொம்பன் என்கிற ஜெகன் கடந்த வருடம் போலீஸ் என்கவுண்டரில் திருச்சியில் கொல்லப்பட்டது குறிப்பிடதக்கது.
இதற்கிடையே ஜானை வெட்டிவிட்டு இரு கார்களில் தப்பிய கொலைகளில் 4 பேர் போலீசார் சுற்றிவளைத்தனர் அப்போது அரிவாளால் போலீசாரை தாக்கிவிட்டு தப்ப முயன்ற சதீஷ், பூபாலன், சரவணன் ஆகிய 3 பேரையும் போலீசார் துப்பாக்கியால் சுட்டனர். காலில் கட்டுடன் அவர்களை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு போலீசார் அழைத்து வந்தனர். தப்பி ஓடிய மற்ற கொலையாளிகளை தேடிவருகின்றனர்.
கொலை வழக்குகளில் சிக்கும் நபர்களை போலீசார் அழைத்துச்சென்று அன்போடு மாவுக்கட்டு போட்டு விட்டாலும், துப்பாக்கியால் காலில் சுட்டு போடாலும் ரவுடிகள் திருந்தியபாடில்லை, குற்றங்களும் குறைந்தபாடில்லை. குழுவாக கொலை சம்பவங்களில் ஈடுபடுவதால், சட்டத்தின் ஓட்டைகளை பயன்படுத்தி கொலையாளிகள் எளிதாக தண்டனைகளில் இருந்த தப்புவதாக சுட்டிக்காட்டும் வழக்கறிஞர்கள், சட்டங்களும், தண்டனைகளும் கடுமையானால் மட்டுமே இத்தகைய கொடூர கொலைகளுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் என்கின்றனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu