முகப்பு
யாரை கேட்கிறாய் வரி..? வராத குடிநீருக்கு வரியா..? வசூல் அதிகாரி சிறைப்பிடிப்பு..! காது கூச காய்ச்சி எடுத்த மக்கள்
Mar 22, 2025 04:44 PM
163
வரி வசூலிக்க கையில் கடப்பாரையுடன் கிளம்பிய அதிகாரிகள்... வராத குடிநீருக்கு வரியா ? அதிகாரிகள் சிறைப்பிடிக்கப்பட்டது ஏன் ?
“அடிக்கிற வெயிலுக்கு அவனவன் நொந்து நூலாகி கிடக்குறான், பைப்புல தண்ணீர் வந்து 20 நாளுக்கு மேல ஆவுது... வராத தண்ணீருக்கு வரி தரணுமா...? என்று மக்கள் கொந்தளித்த இடம்.. சேலம் மாவட்டம் ஆத்தூர் நகராட்சிக்குட்பட்ட , நரசிங்கபுரம் 10 வது வார்டு வடக்கு தலைநகர் ..!
இந்த பகுதியில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில், குடிநீர் கட்டணம் செலுத்தாமல் உள்ள பொது மக்களிடம் குடிநீர் வரி வசூல் செய்வதற்காக நகராட்சி பொறியாளர் ஜெயமாலினி மற்றும் பொதுப்பணி மேற்பார்வையாளர் சுரேஷ் ஆகியோர் வீடு வீடாக சென்றதால் சல சலப்பு ஏற்பட்டது.
அப்போது குடிநீர் கட்டணம் செலுத்தவில்லை என்றால் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் என சுரேஷ் தெரிவித்ததால் ஆத்திரம் அடைந்த மக்கள், தங்கள் பகுதிக்கு 18 நாட்கள் ஒருமுறை குடிநீர் வினியோகம் செய்யப்பட்டதாகவும், இந்த முறை 20 நாட்களுக்கு மேலாகியும் முறையாக குடி நீர் வரவில்லை இதனை ஆய்வு செய்ய வராத அதிகாரிகள் வரி வசூல் செய்ய எப்படி வரலாம் என்று கேட்டு கடும் வாக்குவாதம் செய்தனர்
அப்போது தன்னை வீடியோ எடுத்த இளைஞரின் செல்போனை பறித்த சுரேஷ், ஒரு கட்டத்தில் அதனை கீழே தள்ளிவிட்டதால் அவரை பொதுமக்கள் சிறைபிடித்து கடும் வாக்குவாதம் செய்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு , நகராட்சிஅதிகாரிகளை மீட்டு அழைத்துச்சென்றனர்.
இதே போல கடலூரில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சொத்து வரி செலுத்தாதவர்களின் வீட்டு வாசலில் குழி தோண்டும் திட்டத்துடன் கையில் கடப்பாறையுடன் சென்று அதிகாரிகள் வரி வசூலிக்க சென்றதால் வாக்குவாதம் ஏற்பட்டது.
மார்ச மாதம் முடிவதற்குள் தாங்கள் சொத்துவரியை செலுத்திவிடுவோம் என்ற மக்கள், அதிகாரிகள் தங்களை கடப்பாரையுடன் வந்து அச்சுருத்துவதாக புகார் தெரிவித்தனர்
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu