வேலூர் அருகே, சூதாட்டத்தில் ஈடுபட்ட 13 பேர் கைது
Mar 27, 2025
பைக் மீது கார் மோதியதில் ஒருவர் உயிரிழப்பு
Mar 27, 2025
BIG STORIES
அடங்கா தொழில் அதிபருக்கு சாப்பாட்டில் வைத்த டுவிஸ்ட்.. மாமியார் செய்த சம்பவம்..! கொலையும் செய்வாள் பத்தினி
Mar 26, 2025 01:50 AM
418
தொழில் அதிபருக்கு சாப்பாட்டில் வைத்த டுவிஸ்ட்.. மாமியார் சம்பவம்..!
பெங்களூருவில் கழுத்தருக்கப்பட்ட நிலையில் ரியல் எஸ்டேட் தொழில் அதிபர் சடலமாகக் கிடந்த சம்பவம் தொடர்பாக அவரது மனைவி மற்றும் மாமியாரை போலீசார் கைது செய்தனர். மயக்க மருந்து கலந்த சாப்பாட்டை கணவனுக்கு கொடுத்து கொடூரமாக கொலை செய்த பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு..
பெங்களூருவில் உள்ள ஹீரகட்டா அருகே உள்ள பிஜிஎஸ் லேஅவுட் அருகே கடந்த 22ந் தேதி நடுத்தர வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் கழுத்தறுக்கப்பட்டு சடலமாக கிடந்தார்.
அவரது உடலை கைப்பற்றி விசாரித்த போலீசார் கொலை செய்யப்பட்டவர் 37 வயதான ரியல் எஸ்டேட் தொழில் அதிபரான லோக்நாத் சிங் என்பதை கண்டறிந்தனர்.
கொல்லப்பட்ட லோக் நாத் சிங், எம்.எல்.ஏ. எச்.சி பாலகிருஷ்ணாவின் நெருங்கிய நண்பர் என்பதால் கொலை வழக்கில் துப்பு துலக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டனர்.
இந்த கொலை சம்பவம் தொடர்பாக விசாரித்த சோலதேவனஹள்ளி போலீசார் லோக் நாத் சிங் கொலை செய்யப்பட்ட நேரத்தில் அவருடன் இருந்த செல்போன் சிக்னல்களை வைத்து ஹேமா என்ற பெண்ணையும் எம்பிஏ படித்துக்கொண்டிருந்த அவரது மகள் யஷஸ்வினியையும் பிடித்து விசாரித்த போது கொலைக்காண மர்மம் விலகியது.
தொழில் அதிபரான லோக்நாத் சிங், கல்லூரியில் படித்து வரும் 24 வய்தான யஷ்ஸ்வினியை தனது காதல்வலையில் வீழ்த்தி திருமணம் செய்து கொள்ளாமலேயே பல இடங்களுக்கும் கூட்டிச்சென்று உல்லாசமாக சுற்றி வந்ததாக கூறப்படுகின்றது.
ஒரு கட்டத்தில் யஷஸ்வினியை திருமணம் செய்து கொள்ள விரும்பி அவரது வீட்டுக்கு சென்று பெண் கேட்ட போது, வயது வித்தியாசத்தை காரணம் காட்டி, தனது மகளை திருமணம் செய்து கொடுக்க ஹேமா மறுத்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் யஷஸ்வினியை வீட்டிற்கு தெரியாமல் அழைத்துச்சென்று லோக் நாத் சிங் பதிவு திருமணம் செய்து கொண்டார்.
அதன் பின்னர் அலைபாயுதே ஸ்டைலில் மாணவியை அவரது வீட்டிலேயே விட்டு சென்றுள்ளார். இருவருக்கும் திருமணம் நடந்தாலும் இருவரும் தனி தனியே இருந்ததால், லோக் நாத் சிங் வேறு சில பெண்களுடன் காதல் கொண்டு சுற்றி திரிந்துள்ளார். இதனை அறிந்து யஷஸ்வினி லோக் நாத் சிங் மீது ஆத்திரம் அடைந்தார்.
இதற்கிடையே லோக் நாத் சிங் தனது மகளை காதலித்து ஏமாற்றி திருமணம் செய்து கொண்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்த ஹேமா, தனது மகளின் வாழ்வை சீரழித்து விட்டு வேறு பெண்களுடன் சுற்றி திரியும் லோக்தா சிங்கிற்கு தக்க பாடம் புகட்ட முடிவு செய்தார்.
அதன் படி சம்பவத்தன்று லோக்தா சிங்குடன் காரில் பயணித்த யஷஸ்வினி, தனது தாயின் யோசனைப்படி மயக்க மருந்து கலந்த சாப்பாட்டை எடுத்துச் சென்றிருந்தார். ஹீரகட்டா அருகே உள்ள பிஜிஎஸ் லேஅவுட் பகுதியில் காரை நிறுத்தி தனது காதல் கணவருக்கு அந்த சாப்பாட்டை ஊட்டி விட்டுள்ளார் யஷஸ்வினி
அவரும் ஆசையாக சாப்பிட்ட சிறிது நேரத்தில் காருக்குள்ளேயே மயங்கிய நிலையில், தனது மகள் சென்ற காரை பின் தொடர்ந்து ஆட்டோவில் சென்ற ஹேமா, தான் கையோடு மறைத்து எடுத்துச்சென்றிருந்த கத்தியால் லோக்தாசிங்கின் கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு தனது மகளுடன் சேர்ந்து தப்பிச்சென்றது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து தொழில் அதிபர் லோக்தா சிங் கொலை வழக்கில் தாய் ஹேமா, மாணவி யஷஸ்வினியை போலீசார் கைது செய்தனர். வயதுக்கு மீறிய காதல் எப்போதும் இடும்பை தரும், தாயின் கோபம் மகளையும் கொலை வழக்கில் சிக்க வைத்துள்ளது.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu