தெரு நாய்கள் கடித்து குதறியதில் குரங்கு படுகாயம்
Mar 27, 2025
BIG STORIES
பாலிடெக்னிக் மாணவிகளுக்கு பாலியல் வன்கொடுமை?.. போலீசை SFI ஆக்ரோஷமாக தாக்கியது ஏன்? நடந்தது என்ன?
Mar 26, 2025 01:23 AM
265
போலீசை SFI ஆக்ரோஷமாக தாக்கியது ஏன்? நடந்தது என்ன?
தரமணியில் தருமாம்பாள் அரசினர் பாலிடெக்னியில் இரு மாணவிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக கூறி எஸ்.எப்.ஐ மாணவர் அமைப்பு போராட்டம் நடத்திய நிலையில், சம்பந்தப்பட்ட மாணவிகள் இருவரும் தனது காதலர்களுடன் வெளியில் சுற்றியதால் விடுதியில் இருந்து மட்டும் நீக்கம் செய்யப்பட்டிருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்
போலீசாரை மாணவர் அமைப்பினர் இந்த அளவுக்கு ஆக்ரோசமாக தாக்குவதற்கு என்ன காரணம்..?
சென்னை தரமணியில் உள்ள தருமாம்பாள் அரசினர் மகளிர் தொழில் நுட்ப கல்லூரியில் 16 வயதான பாலிடெக்னிக் படித்து வரும் 2 மாணவிகள் உடலில் காயம் இருந்ததால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக கல்லூரி வளாகத்தில் தகவல் பரவியது தான் முக்கிய காரணமாக சொல்லப்படுகின்றது...
இதனைத் தொடர்ந்தே இந்திய மாணவர் சங்கத்தினர் 2 மாணவிகளும் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பதாவும், இதனை கல்லூரி நிர்வாகம் மூடி மறைத்து மாணவிகளுக்கு டீசி கொடுக்க உள்ளதாகவும் கூறி அதனை கண்டித்தே கல்லூரிக்குள் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
இதனை அறிந்த தரமணி போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தடுத்து நிறுத்த முயன்றபோது இரு தரப்பினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டு மோதலாக மாறியது.
இரண்டு மாணவிகளும் கடந்த 16 ஆம் தேதியன்று இன்ஸ்டாவில் பழகிய ஆண் நண்பர்களை காண விடுதியில் இருந்து வெளியே சென்றது தெரியவந்துள்ளது.
அதில் ஒரு மாணவி சென்னை பீச் சென்றுவிட்டு, இரவு முழுவதும் கிண்டி பாலத்தில் ஆண் நண்பரோடு இருந்ததும் தெரியவந்துள்ளது.
இதனை தொடர்ந்து இரவில் மாணவி வெளியே தங்கியதால், கல்லூரி நிர்வாகம் மாணவியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்து மாணவியை விடுதியில் இருந்து மட்டுமே வெளியேற்றியதாக கூறப்படுகிறது.
மேலும் மற்றொரு மாணவியும் இன்ஸ்டாவில் பழக்கமான ஆண் நண்பரோடு வெளியில் சென்றபோது, அந்த ஆண் நண்பர் மாணவியை திருமணம் செய்து கொள்வதாக கூறி 3 சவரன் நகைகளை கேட்டதற்கு அந்த மாணவியும் நகையை கொடுத்துள்ளார்.
பின்னர் அந்த ஆண் நண்பர் மாணவியின் பெற்றோருக்கு போன் செய்து "நானும் உன் மகளும் திருமணம் செய்ய போகிறோம், இனி நான் சொல்வதை தான் அவள் கேட்பாள்" என மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதனால் பெற்றோர் மகளின் ஆண் நண்பர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இரண்டு மாணவிகளும் பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை எனவும் அந்த மாணவிகளுக்கு கல்லூரி நிர்வாகம் டீ.சி கொடுத்து அனுப்பவில்லை எனவும் வழக்கு விசாரணை நடைபெற்று இருப்பதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். பின்னர் தர்ணாவில் ஈடுபட்ட இந்திய மாணவர் சங்கத்தினர் கலைந்து சென்றுள்ளனர்
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu