RECENT NEWS

உத்தரப்பிரதேசம் கும்பமேளா சம்பவம் ஒரு மாதத்தில் விசாரணை முடியும் - யோகி ஆதித்யநாத்

தமிழ்நாடு

பாய்ஸ்.. இது ரொம்ப லேட்டுடா.. பொண்ணா இருக்கறப்ப விட்டுட்டு கர்ப்பிணியானதும் தூக்குனா எப்படி..? இதுக்காகவா அரிவாள் கத்தி எல்லாம்..?

Jan 24, 2025 01:38 AM

20

443

பாய்ஸ்.. இது ரொம்ப லேட்டுடா.. பொண்ணா இருக்கறப்ப விட்டுட்டு கர்ப்பிணியானதும் தூக்குனா எப்படி..? இதுக்காகவா அரிவாள் கத்தி எல்லாம்..?

பாய்ஸ்.. இது ரொம்ப லேட்டுடா.. பொண்ணா இருக்கறப்ப விட்டுட்டு கர்ப்பிணியானதும் தூக்குனா எப்படி..? இதுக்காகவா அரிவாள் கத்தி எல்லாம்..?

எடப்பாடி அருகே வீடு புகுந்து அரிவாள் மற்றும் கத்தியை காட்டி மிரட்டி, 5 மாத கர்ப்பிணியை கடத்திச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காதல் திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த பெண் வீட்டார் கூலிப்படையுடன் சென்று கர்ப்பிணி பெண்ணை இழுத்துச்சென்ற பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு....

7 மாதங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டு காதல் கணவரின் வீட்டில் வசித்து வந்த பெண்ணை, கத்தியை காட்டி மிரட்டி பெண் வீட்டார் கடத்திச்செல்லும் காட்சிகள் தான் இவை..!

சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த செட்டிமாங்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் பொறியாளர் ஏழுமலை தனுஷ்கண்டன். இவரும், தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியை சேர்ந்த ரோஷினியும் ஒசூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்த போது காதலித்து கடந்த 7 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இருவரும் வேறு வேறு சாதி என்பதால் இவர்களின் திருமணத்துக்கு பெண் வீட்டில் எதிர்ப்பு கிளம்பியது. இருவரும் காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர். பெண் வீட்டாரை போலீசார் விசாரணைக்கு அழைத்த போது ஓடிபோன பெண் தங்களுக்கு வேண்டாம் என்று போலீசாரிடம் தெரிவித்ததாக கூறப்படுகின்றது. பின்னர் இந்த காதல் ஜோடி செட்டிமாங்குறிச்சியில் உள்ள வீட்டில் வசித்து வந்தனர் .

பெண் வீட்டாரால் தங்களுக்கு எந்த ஆபத்தும் வந்து விடக்கூடாது என்பதற்காக, வீட்டை சுற்றி தனுஷ் கண்டன் சிசிடிவி காமிராக்களை அமைத்துள்ளார். சந்தேகத்துக்கு இடமான நபர்கள் நம்மை கண்காணிக்கிறார்களா ? என்பதையும் அவர் தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளார். ரோஷினி 5 மாத கர்ப்பிணியாக உள்ள நிலையில் அவர்களது வீட்டிற்கு காரில் வந்திறங்கிய மர்ம கும்பல் கையில் அரிவாள், கத்தியுடன் வீடு புகுந்து ரோஷினியை இழுத்துச்சென்று தங்களது காரில் ஏற்றினர்

தடுக்க முயன்றவர்களை கத்தியை காட்டி மிரட்டி விரட்டினர், கையால் பிடித்து தள்ளிவிட்டனர்

வீட்டிற்குள் படுத்து உறங்கிக் கொண்டிருந்த தனுஷ்கண்டன் சத்தம் கேட்டு விழித்துக் கொண்டு காரை மறிக்க ஓடி வந்தார், அவரை தள்ளிவிட்டு மின்னல் வேகத்தில் புறப்பட்டது கார்

சாலைக்கு சென்று தங்கள் வீட்டு மருமகளை கடத்திச்செல்வதாக பெற்றோர் கூச்சலிட்ட நிலையில் , கார் மறித்தவர்களை எல்லாம் இடித்துத் தள்ளுவது போல அதிவேகத்தில் சென்றது

வழியில் ஒரு பைக்கின் மீதும் மோதிய அந்த கார் நிற்காமல் சென்று விட்டது, ஆயுதங்களுடன் வந்து கர்ப்பிணியை கடத்திச்செல்வதாக காவல் கட்டுப்பாட்டறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக போலீசார் தனிப்படை அமைத்து கடத்தலில் ஈடுபட்ட காரை கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர்.

சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் நடத்திய விசாரணையில் ரோஷினின் உறவினர்கள் ஊருக்குள் வந்து நீண்ட நாட்களாக நோட்டமிட்டு, கூலிப்படை ஆசாமிகளை அழைத்து வந்து ரோஷினியை கர்ப்பிணி என்றும் பாராமல் கடத்திச்சென்றது தெரியவந்தது. தொடர்ந்து கடத்தல் கும்பலை தேடி வருவதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் திருமணம் செய்து கொண்ட அன்றே காவல் நிலையம் வந்து தங்கள் பெண்ணிடம் மனம் விட்டு பேசி பெற்றோர் தங்கள் பெண்ணின் முடிவை தெரிவித்து சென்றிருக்கலாம் என்ற போலீசார் அதை விடுத்து கர்ப்பிணியான பின்னர் தங்கள் மகளை வீடு புகுந்து தூக்கிச்செல்வது கடத்தலாகவே கருதப்படும் என்றனர்.





SHARE

shareshareshareshare

RELATED POSTS

BIG STORIES

அண்ணே.. பராசக்தி... தம்பி .. பராஷக்தி... எழுத்தில் விளையாடுறாய்ங்களாம்..! என்னடா இது SKவுக்கு வந்த சோதனை

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2025 - Polimernews.com. All Right Reserved. Designed and Developed by Polimer News