முகப்பு
திவ்யாவுக்கு தோண்டிய குழி குப்புற விழுந்த சீட்டிங் சித்ரா போக்சோவில் சிக்கியது ஏன்? யூடியூப் களைகள் அகற்றப்படுமா ?
Jan 30, 2025 01:02 AM
644
திவ்யாவுக்கு தோண்டிய குழி குப்புற விழுந்த சீட்டிங் சித்ரா போக்சோவில் சிக்கியது ஏன்? யூடியூப் களைகள் அகற்றப்படுமா ?
சிறுவர்களை வைத்து ஆபாச படம் எடுத்து, இணையத்தில் விற்பனை செய்த விவகாரத்தில் யூடிப்பர் திவ்யா கள்ளச்சி , மக்கள் பார்வை சித்ரா, உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர். 7 வருடத்துக்கு முன்பு கோடிகளை சுருட்டிய கேடி லேடி மீண்டும் சிக்கிய பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..
இத்து போன காதலன் கார்த்தியை தேடி அலைவதாக செத்து போன டிக்டாக்கில் வீடியோ போட்டு, யூடியூப்புக்கு மாறிய ஜீவராசிகளில் ஒருவர் திவ்யா கள்ளச்சி..!
திவ்யாவுடன் இணைந்து செய்த, அலப்பறையை வீடியோ எடுத்து யூடியூப்பில் அப்லோடு செய்து காசு பார்த்து வந்தவர் ஈரோடு கார்த்தி ..!
மாடலான மகளை திருமணம் செய்து தருவதாக கூறி 10 ஐ.டி மாப்பிள்ளைகளை ஏமாற்றி 2 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி செய்ததாக, சிறைக்கு சென்று வந்த வாடகை தாய் மக்கள் பார்வை சித்ரா..!
7 வருடங்களுக்கு முன்பு சேலத்தில் திருமண மோசடி வழக்கில் சிக்கி குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறை சென்று திரும்பிய இந்த சீட்டிங் சித்ரா கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அதில் திவ்யா கள்ளச்சி சிறுவர்களை பாலியல் தேவைக்கு பயன்படுத்தி வீடியோ எடுப்பதாகவும், அதனை ஆபாச இணையதளங்களுக்கு விற்பதாகவும் தெரிவித்த அவர், தன்னிடம் இருந்து இரண்டரை லட்சம் ரூபாய் பணத்தை மோசடியாக அபகரித்துக் கொண்டதாகவும் குற்றஞ்சாட்டினார்
இது குறித்து சித்ரா , டிஜிபி அலுவலகத்தில் அளித்த புகார் விசாரணைக்காக விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மாவட்ட குழந்தைகள் நல அலுவலரின் கவனத்துக்கு சென்ற இந்த ஆபாச வீடியோ விவகாரம் தொடர்பாக ஸ்ரீவில்லிபுத்தூர் போலீசார் விசாரித்தனர். இதில் பல திடுக்கிடும் தகவல் தெரியவந்தது.
திவ்யா கள்ளச்சியும், கார்த்தியும் யூடியூப் வீடியோ எடுப்பதற்காக ஸ்ரீவில்லிபுத்தூர் சென்ற நிலையில் கார்த்தியை தொடர்பு கொண்ட சித்ரா, திவ்யா சிறுவர்களுடன் நெருக்கமாக இருப்பது போன்று வீடியோ எடுத்து தந்தால் லட்சம் ரூபாய் தருவதாக கூறியதாக சொல்லப்படுகின்றது. அதன் பேரில் தனக்கு தெரிந்த ஹவுசிங் போர்டு ஆனந்தை வரவழைத்து இரு சிறுவர்களுடன் திவ்யா ஆபாசமாக இருக்கும் வீடியோவை பதிவு செய்துள்ளார் கார்த்திக். அந்த ஆபாச வீடியோவை சித்ராவுக்கு அனுப்பி உள்ளார். அதனை வைத்து சீட்டிங் சித்ரா , திவ்யாவிடம் பணம் கேட்டு மிரட்டியதாகவும், பணம் கொடுக்க மறுத்ததால் அதனை பொது தளத்தில் பரப்பி விட்டு , அவரே நடவடிக்கை எடுக்கும்படியும் புகார் அளித்தது தெரியவந்ததால் சித்ராவையும் இந்த வழக்கில் சேர்த்ததாக போலீசார் தெரிவித்தனர்.
இதையடுத்து சிறுவர் ஆபாச பட விவகாரம் தொடர்பாக திவ்யா, கார்த்தி, ஆனந்த், சித்ரா ஆகிய 4 பேரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்திருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu
@2025 - Polimernews.com. All Right Reserved. Designed and Developed by Polimer News