முகப்பு
உத்தரப்பிரதேசம் கும்பமேளா சம்பவம் ஒரு மாதத்தில் விசாரணை முடியும் - யோகி ஆதித்யநாத்
Jan 30, 2025 03:20 AM
219
உத்தரப்பிரதேசம் கும்பமேளா சம்பவம் ஒரு மாதத்தில் விசாரணை முடியும் - யோகி ஆதித்யநாத்
பிரயாக்ராஜ் மகாகும்பமேளா நெரிசலில் 30 பேர் உயிரிழந்த விவகாரம் குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் கண் கலங்கியவாறு பேசிய அவர், கும்பமேளாவின் முக்கிய நாளான அமாவாசையன்று, 10 கோடி பேரை சமாளிக்கத் தேவையான முன்னேற்பாடுகளை செய்திருந்த நிலையில், நள்ளிரவு 2 மணிக்கு ஆற்றின் கரையோரம் வைக்கப்பட்ட தடுப்புகளைத் தாண்டி சிலர் புனித நீராட செல்ல முயன்றதால் நெரிசல் ஏற்பட்டதாகத் தெரிவித்தார்.
சம்பவம் குறித்து கேள்விப்பட்டதும், பிரதமர் 4 முறை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாகக் கூறிய அவர், இதயம் பதறிப்போகும் அளவுக்கு நிகழ்ந்த இந்த சம்பவத்தை பாடமாக எடுத்துக் கொண்டு, எதிர்காலத்தில் செயல்படுவோம் என்று தெரிவித்தார்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu
@2025 - Polimernews.com. All Right Reserved. Designed and Developed by Polimer News