​​
Polimer News
Polimer News Tamil.

நள்ளிரவில் கொள்ளை... நடுங்கிப்போன குடும்பத்தினர் சினிமா பாணியில் ஒரு சம்பவம் !

பெரம்பலூர் அருகே தீரன் திரைப்பட பாணியில் நள்ளிரவில் வீட்டின் கதவை உடைத்து புகுந்த முகமூடி கொள்ளையர்கள், கத்தி முனையில் தாலிசங்கிலியை பறித்துக் கொண்டு காரையும் கடத்திச் சென்றுள்ளனர். பெரம்பலூர் அடுத்த அம்மாபாளையத்தில் வசித்து வருபவர் விவசாயி பாண்டியன். சனிக்கிழமை இரவு 10 மணிக்கு...

உக்ரைனில் பள்ளி வளாகம் மீது ரஷ்ய படைகள் வான்வழி தாக்குதல்.. 60 பேர் வரை உயிரிழந்திருக்க வாய்ப்பு - ஆளுநர் தகவல்

உக்ரைனின் லுஹான்ஸ்க் நகரம் அருகே சுமார் 90 பேர் தஞ்சமடைந்திருந்த பள்ளி வளாகம் மீது ரஷ்ய படைகள் நிகழ்த்திய வான் தாக்குதலில் 60 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதுவரை 2 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், இடிபாடுகளை அகற்றும்...

அரசு பள்ளிகளில் அடுத்த ஐந்தாண்டுகளில் 15,000 வகுப்பறைகள் கட்ட இலக்கு - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

அரசு பள்ளிகளில் அடுத்த ஐந்தாண்டுகளில் 15,000 வகுப்பறைகள் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். கும்பகோணத்தில், தனியார் வேலைவாய்ப்பு முகாம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 500 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை அவர் வழங்கினார். பின் செய்தியாளர்களை சந்தித்த அன்பில்...

பொதுத்துறையின் 3 காப்பீட்டு நிறுவனங்களுக்குக் கூடுதல் மூலதனம்.!

பொதுத்துறையைச் சேர்ந்த மூன்று காப்பீட்டு நிறுவனங்களுக்கு அவற்றின் நிதிநிலையை வலுப்படுத்த மூவாயிரம் கோடி ரூபாய் முதல் ஐயாயிரம் கோடி ரூபாய் வரை கூடுதல் மூலதனம் வழங்க அரசு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. நேசனல் இன்சூரன்ஸ், ஓரியன்டல் இன்சூரன்ஸ், யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் ஆகிய நிறுவனங்களுக்குக்...

திருடப்போன வீடு... தூங்கிக்கொண்டிருந்த பெண்... ரசித்து நின்ற சின்ராசை உரித்து எடுத்த உறவினர் !

சேலம் அருகே திறந்து கிடந்த வீடு ஒன்றுக்குள் திருடச் சென்ற திருடன் ஒருவன், வீட்டுக்குள் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணை ரசித்தவாறு நின்ற நிலையில், திடீரென விழித்த அந்தப் பெண் கூச்சலிட்டதால், வீட்டில் உள்ளவர்களிடம் சிக்கினான். சேலம் சூரமங்கலம் பகுதியில் இரவில் அடிக்கடி மின்...

கேரளத்தில் தக்காளிக் காய்ச்சல்... தமிழகத்தில் அச்சம் வேண்டாம்

கேரளத்தின் கொல்லம் மாவட்டத்தில் தக்காளிக் காய்ச்சலால் 85 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ள நிலையில், இது குறித்து அச்சமடையத் தேவையில்லை எனத் தமிழக நல்வாழ்வுத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கேரளத்தில் குழந்தைகளுக்குப் புதிய வகைக் காய்ச்சல் பரவி வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கொல்லம் மாவட்டத்தில்...

காஷ்மீரில் பாதுகாப்புப் படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச்சூட்டில் தீவிரவாதி உட்பட 2 பேர் சுட்டுக் கொலை.!

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச்சூட்டில் லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதி உட்பட 2 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். குல்காம் மாவட்டத்தின் செயன் பகுதியில் அதிகாலை 3 மணியளவில் நடந்த இந்த துப்பாக்கிச்சூட்டில் சுட்டுக் கொல்லப்பட்ட...

விருத்தாசலத்தில் சாலையோரத்தில் குவியலாக கொட்டப்பட்ட காலாவதியான ரவை, மைதா, கோதுமை பாக்கெட்டுகள்.!

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே சாலையோரத்தில், காலாவதியான ரவை, மைதா, கோதுமை பாக்கெட்டுகள் குவியலாக கொட்டப்பட்டுள்ளன. விருத்தாசலம் - சேலம், விருத்தாசலம் - உளுந்தூர்பேட்டை, விருத்தாசலம் ரயில்வே ஜங்ஷன் - எருமனூர் புறவழி சாலையோரம் தொடர்ந்து காலாவதியான மருந்து, உணவு பொருட்கள் கொட்டப்படுவது...

ஐ.பி.எல் தொடரில் பங்கேற்காதது குறித்து கிறிஸ் கெய்ல் விளக்கம்

கடந்த ஐ.பி.எல் தொடரின் போது மரியாதை குறைவாக நடத்தப்பட்டதால் இந்தாண்டு ஐ.பி.எல் தொடரில் பங்கேற்கவில்லை என கிறிஸ் கெய்ல் தெரிவித்துள்ளார். மேற்கிந்திய தீவுகளின் அதிரடி பேட்ஸ்மேனான கிறிஸ் கெய்ல் 2018ம் ஆண்டு முதல் பஞ்சாப் அணிக்காக விளையாடி வருகிறார். 2019 ம் ஆண்டு...

ஐதராபாத் ஆணவக் கொலையில் தொடர்புடைய மேலும் இருவரைக் கைது செய்யக் கோரி பாஜக பிரதிநிதிகள் மனு.!

ஐதராபாத் ஆணவக் கொலையில் தொடர்புடைய மேலும் இருவரைக் கைது செய்யக் கோரி தெலங்கானா ஆளுநர் தமிழிசையிடம் பாஜக பிரதிநிதிகள் மனு அளித்தனர். மாற்று மதப் பெண்ணைக் காதலித்துத் திருமணம் செய்த நாகராஜ் என்பவரைப் பெண்ணின் அண்ணன் உட்பட 4 பேர் இரும்புக் கம்பியால்...