​​
Polimer News
Polimer News Tamil.

நடுவானில் பறந்த விமானத்தில் பயணிகளிடையே சண்டை… வெளியான வீடியோ

நடுவானில் பறந்த விமானத்தில் பயணிகள் ஒருவரை ஒருவர் கட்டி சண்டையிட்ட வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. நெதர்லாந்து நோக்கி பறந்து கொண்டு இருந்த விமானத்தில் நிறவெறியை தூண்டும் கருத்து தெரிவித்ததாக இரு பிரிவினர் இடையே சண்டை மூண்டது. நடுவானில் பறந்த விமானத்தில்...

தீர்ப்பாயங்களில் உள்ள காலியிடங்களை நிரப்பா விட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் மீண்டும் எச்சரிக்கை

தீர்ப்பாயங்களில் உள்ள காலியிடங்களை நிரப்பா விட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது. அடுத்த விசாரணைக்குள் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணுமாறும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.  அரசுத் தரப்பில் அவகாசம் கோரி மீண்டும் மீண்டும்...

நட்சத்திர விடுதியில் பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து: 18 பேர் பலி...64 பேர் படுகாயங்களுடன் மீட்பு!

கியூபா தலைநகர் ஹவானாவில் உள்ள நட்சத்திர விடுதியில் ஏற்பட்ட வெடி விபத்தில் 18 பேர் உயிரிழந்தனர். பயங்கர சத்தத்துடன் கூடிய வெடிவிபத்தால் கட்டடத்தின் முன்பகுதி உருக்குலைந்தது. தூக்கி வீசப்பட்ட கட்டடத்தின் சிமெண்ட் கற்கள் சாலையில் சென்ற பேருந்து மற்றும் கார்கள் மீது விழுந்து சேதத்தை...

ரூ.1000-ஐ தாண்டியது வீட்டு உபயோகத்திற்கான எரிவாயு சிலிண்டர் விலை

ரூ.1000-ஐ தாண்டியது கியாஸ் சிலிண்டர் விலை வீட்டு உபயோகத்திற்கான எரிவாயு சிலிண்டர் விலை 50 ரூபாய் உயர்வு சென்னையில் சிலிண்டர் விலை 1,015 ரூபாய்க்கு விற்பனை 965 ரூபாய்க்கு விற்கப்பட்ட சிலிண்டர் 50 ரூபாய் உயர்ந்து ரூ.1,015-க்கு விற்பனை...

ஜம்மு காஷ்மீரில் எல்லைத் தாண்டி ஊடுருவ 200 தீவிரவாதிகள் காத்துக் கொண்டிருப்பதாக தகவல்!

ஜம்மு காஷ்மீரில் எல்லைத் தாண்டி ஊடுருவ சுமார் 200 தீவிரவாதிகள் காத்துக் கொண்டிருப்பதாக ராணுவத்தின் வடக்கு கமாண்டர் லெப்டினன்ட் ஜெனரல் உபேந்திரா திவேதி தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் ராணுவத்தின் உதவியுடன் எல்லைக்கு அருகே சுமார் 35 தீவிரவாத முகாம்கள் இயங்கி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.  தீவிரவாதிகள்...

4 மாடி கட்டடத்தில் பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து... 2 பேர் உயிரிழப்பு

ஸ்பெயின் மேட்ரிட் நகரில் 4 மாடி கட்டடத்தில் பயங்கர சத்தத்துடன் நிகழ்ந்த வெடி விபத்து சம்பவத்தில் 2 பேர் உயிரிழந்தனர். சீரமைப்பு பணி நடந்து கொண்டிருந்த நிலையில் பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டது. 2 ஊழியர்கள் உயிரிழந்த நிலையில் அருகில் இருந்த...

ஓராண்டில் 100 பில்லியன் டாலர் வருவாய் கொண்ட முதல் இந்திய நிறுவனம் என்ற சாதனையை எட்டியது ரிலையன்ஸ்

ஒரு ஆண்டில் 100 பில்லியன் டாலர் வருவாய் ஈட்டிய முதல் இந்திய நிறுவனமாக முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் புது மைல்கல்லை எட்டியது. கடந்த மார்ச் மாதத்துடன் முடிந்த காலாண்டில் 16 ஆயிரத்து 203 கோடி ரூபாய் நிகர லாபத்தை ரிலையன்ஸ் நிறுவனம்...

மாரத்தான் போட்டியில் பங்கேற்று பதக்கத்தை வென்ற வாத்து

அமெரிக்காவில் நியூயார்க் மாகாணத்தில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் கலந்து கொண்ட வாத்து ஒன்று பதக்கம் வெல்லும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. long island ல் நடைபெற்ற இந்த மாரத்தான் போட்டியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அவர்களுடன் அழகான வெள்ளை நிற வாத்தும்...

இலங்கையில் நள்ளிரவு முதல் மீண்டும் அவசரநிலைப் பிரகடனம்

இலங்கையில் அதிபர் கோத்தபயா ராஜபக்சே பதவி விலக போராட்டங்கள் வலுத்து வரும் நிலையில் நள்ளிரவு முதல் மீண்டும் அவசர நிலை பிரகடனம் அமல்படுத்தப்பட்டுள்ளது . போராட்டங்களை ஒடுக்க ராணுவத்துக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கையில் அதிபர் கோத்தபய...

பண மோசடி புகாருக்குள்ளான தனது வருங்கால கணவரை கைது செய்த பெண் எஸ்.ஐ.

அசாம் மாநிலத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ஏராளமானவர்களிடம் பண மோசடி செய்த செய்த வழக்கில், தனது வருங்கால கணவரை, பெண் உதவி ஆய்வாளர் ஒருவர் கைது செய்துள்ளார். அம்மாநிலத்தில் உள்ள நாகோன் என்ற நகரில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வரும் ஜூன்மோனி...