தமிழையும், தமிழ்நாட்டையும் விட்டு விடாதீர்கள் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

0 2332
தமிழையும், தமிழ்நாட்டையும் விட்டு விடாதீர்கள் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

மரம் எவ்வளவு உயரமாக வளர்ந்தாலும் அது வேரை விட்டு விடுவதில்லை, அதை போல் தமிழையும், தமிழ்நாட்டையும் விட்டு விடாதீர்கள் என துபாயில் தமிழர்கள் மத்தியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.

அரசு முறைப்பயணமாக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்றுள்ள முதலமைச்சர், துபாயில் நடைபெற்ற 'நம்மில் ஒருவர் நம்ம முதல்வர்' என்ற நிகழ்ச்சியில் உரையாற்றினார்.

அப்போது, அயலக மண்ணில் இருக்கிறேனா அல்லது தமிழ்நாட்டில் இருக்கிறேனா என்று தெரியாத அளவிற்கு அன்பில் மிதந்ததாக குறிப்பிட்டார். மேலும், தமிழால் அனைவரும் இணைந்தால் மதம், சாதியால் நம்மை யாராலும் பிரிக்க முடியாது என்றும் முதலமைச்சர் கூறினார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments