தமிழ்நாடு
வீட்டில் சேர்க்க மாட்டாங்க... உன் கையால் கொன்று விடு.. திருமணத்திற்கு 2 நாள் முன் கொலை..! ஜாதியால் முடிந்த 7 ஆண்டு காதல்
Apr 04, 2025 11:12 AM
392
வீட்டில் சேர்க்க மாட்டாங்க... உன் கையால் கொன்று விடு.. திருமணத்திற்கு 2 நாள் முன் கொலை..!
7 ஆண்டு காதலியை திருமணத்திற்கு 2 நாட்களுக்கு முன்பாக அடித்துக் கொலை செய்து விட்டு விபத்து போல நாடகமாடிய காதலன் சிக்கிய பின்னணியை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.
காஞ்சிபுரம் மாவட்டம் கொளத்தூரைச் சேர்ந்த எல்லப்பன் மகள் விக்னேஸ்வரி, ஸ்ரீபெரும்புதூர் பகுதியிலுள்ள கார் உதிரி பாகம் நிறுவனத்தில் வேலைப்பார்த்து வந்தார். ஏப்ரல் 5 ஆம் தேதி அவருக்கும் அவரது 7 ஆண்டு காதலனான புதுக்கோட்டையைச் சேர்ந்த தீபனுக்கும் திருமணம் செய்து வைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்தது.
இந்நிலையில், காதலனோடு மொபட்டில் வெளியே சென்ற விக்னேஸ்வரி விபத்தில் உயிரிழந்ததாக குடும்பத்தினருக்கு தகவல் கிடைத்தது. சடலத்தை கைப்பற்றி போலீஸார் நடத்திய விசாரணையில், தலையில் அடித்து கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.
விக்னேஷ்வரியுடன் மொபட்டில் சென்ற தீபனுக்கு என்னவானது என கேள்வி போலீஸாருக்கு எழவே அவரை தேடத் துவங்கினர். தீபனின் செல்ஃபோன் எண்ணை தொடர்புக் கொண்டு விக்னேஷ்வரி உயிரிழந்த விவரத்தை போலீஸார் கூறவும், எதுவுமே தெரியாதது போல சொந்த ஊருக்கு செல்வதாக தீபன் கூறியுள்ளார்.
அவரது செல்ஃபோன் டவர் லொகேஷன் மூலமாக சிவகங்கையில் வைத்து தீபனை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளி வரத் துவங்கின.
ஒரே இடத்தில் வேலைப்பார்த்து வந்ததால் ஏற்பட்ட பழக்கத்தால் விக்னேஸ்வரியை தீபன் காதலித்து வந்துள்ளார். விக்னேஸ்வரியின் வீட்டிலேயே தங்கியிருந்து வேலைக்குச் செல்லும் அளவிற்கு அவர்கள் காதல் வளர்ந்துள்ளது.
திருமண பேச்சை எடுத்த போது வேறு ஜாதியைச் சேர்ந்தவர் என தீபனின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. மனமுடைந்த விக்னேஸ்வரி கடந்த 6 மாதத்திற்கு முன்பு விஷம் குடித்து தற்கொலை செய்துக் கொள்ள முயன்றதால் இருகுடும்பத்தினரையும் அழைத்து போலீஸார் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர்.
அப்போது, ஏப்ரல் 5 ஆம் தேதி எளிய முறையில் திருமணம் செய்துக் கொள்வது என இரு குடும்பத்தாரும் முடிவெடுத்ததாக கூறப்படுகிறது.
செவ்வாயன்று விக்னேஷ்வரியும், தீபனும் ஜவுளி கடைக்கு சென்று திருமணத்திற்கான பட்டுப்புடவை, வேஷ்டி வாங்கி விட்டு வீடு திரும்பியுள்ளனர். அப்போது, திருமணம் செய்ய குறித்த நாளில் நிச்சயதார்த்தம் வைத்துக் கொண்டு திருமணத்தை சில மாதங்கள் தள்ளி வைக்கலாம் என தீபன் கூறியுள்ளார்.
இந்த நிலையில் வெளியே சென்று வரலாம் எனக் கூறி தனது மொபட்டில் தீபனை விக்னேஸ்வரி அழைத்துச் சென்றுள்ளார்.
ஆள்நடமாட்டம் குறைவாக உள்ள குன்றத்தூர்- ஸ்ரீபெரும்புதூர் சாலையிலிருந்து சற்று ஓரமாக நின்று இருவரும் பேசிய போது ஜாதி வித்தியாசத்தால் எனது குடும்பத்தினர் திருமணத்திற்கு ஒத்துக்கொள்ளவில்லை என தீபன் கூறியுள்ளார்.
அதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் கையில் வைத்திருந்த பிளாஸ்கால் தலையில் அடித்ததில் மயக்கம் அடைந்த விக்னேஷ் வரியை கல்லால் அடித்துக் கொன்றதாக தீபன் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர்.
கொலையை மறைக்க விபத்து போல மாற்றுவதற்காக மின்கம்பத்தில் தலையையும், மொபட்டையும் மோத வைத்து விட்டு தப்பிச் சென்று விட்டதாக தீபன் போலீசாரிடம் தெரிவித்துள்ளான்.
கொலை வழக்கில் குற்றவாளியை 24 மணி நேரத்தில் கைது செய்ததாக போலீஸார் தெரிவித்தனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu