RECENT NEWS

சிட்டி யூனியன் வங்கி ஏ.டி.எம் மையத்தில் கொள்ளை முயற்சி.. இயந்திரத்தை உடைக்க முடியாததால் விட்டுச் சென்ற கொள்ளையன்

தமிழ்நாடு

ஸ்கெட்சுன்னா சும்மாவா..?! மாமியாரின் தாலி அறுத்த மருமகள்..! என்னம்மா.. இப்படி பண்ரீங்களேம்மா..?

Apr 16, 2025 01:22 AM

380

ஸ்கெட்சுன்னா சும்மாவா..?! மாமியாரின் தாலி அறுத்த மருமகள்..! என்னம்மா.. இப்படி பண்ரீங்களேம்மா..?

ஸ்கெட்சுன்னா சும்மாவா..?! மாமியாரின் தாலிஅறுத்த மருமகள்..! என்னம்மா.. இப்படி பண்ரீங்களேம்மா..?

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே அவதூறாக பேசியதாக மாமியாரை ஆள் வைத்து தாக்கி தாலியை அறுத்ததாக மருமகளை போலீசார் கைது செய்துள்ளனர்.

தனது தாயை கொடூரமாக தாக்கியவர்களை மன்னிக்கவே மாட்டேன் என்று கண்ணீர் மல்க ஆதங்கம் தெரிவிக்கும் இவர் தான் மனைவியின் மர்மம் அறியாத அப்பாவி கணவர் ஆறுமுகம்..!

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த மண்டலவாடி பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் இவரது மனைவி வசந்தி, இவர்களின் வீட்டுக்கு அருகில் சிறிய வீட்டில் ஆறுமுகத்தின் தந்தை கிருஷ்ணன் (70) தாய் கனகா (65) வசித்து வந்தனர். பெரியவர் கிருஷ்ணனுக்கு வயது முதிர்வு காரணமாக தானாக எழுந்து நடக்க இயலாத நிலையில் இருந்தார்.

இந்த நிலையில் கடந்த மாதம் 31 ந்தேதி இரவு முதியவர்கள் வசித்து வந்த வீட்டின் கதவு தட்டப்பட்டுள்ளது. கனகா எழுந்து சென்று கதவை திறந்ததும், அவரது முகத்தில் மிளகாய் பொடி வீசிய மர்ம ஆசாமி அவரது முகத்தை மப்ளர் போன்ற துண்டால் இறுக்கமாக கட்டி உருட்டுக் கட்டையால் சரமாரியாக தாக்கியதோடு, கனகாவின் கழுத்தில் கிடந்த 4 சவரன் தங்க தாலியையும் அறுத்துக் கொண்டு தப்பிச்சென்றதாக கூறப்படுகின்றது.

தாய்க்கு நேர்ந்த கொடுமை குறித்து பதறிய மகன் ஆறுமுகம் அளித்த புகாரின் பேரில் ஜோலார்பேட்டை போலீசார் மர்ம நபர் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். பலகோணங்களில் விசாரித்த போலீசார் துப்புதுலங்காததால் திணறிபோயினர். கனகாவின் தலையில் பட்ட காயமே ஆறிப்போன நிலையில், தாலியை பறிகொடுத்த ஆதங்கத்தில் இருந்த மூதாட்டி கனகாவிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது, தனக்கும் , தனது மருமகளுக்கும் சில நாட்களாகவே பேச்சுவார்த்தை சரியில்லை, அவ தான் இப்படி செஞ்சிருப்பான்னு சந்தேகமா இருக்குன்னு போலீசாரிடம் தெரிவித்தார்.

மாமியார் கனகா சொன்ன தகவலால் மருமகள் வசந்தியிடம் போலீசார் விசாரணையை முன்னெடுத்தனர், அவரது செல்போனை கைப்பற்றி அதில் அவர் யார் யாருடன் பேசி உள்ளார் என்பதையும் ஆய்வு செய்தனர். அப்போது வசந்தி சம்பவம் நடப்பதற்கு சிறிது நேரத்துக்கு முன்பாக இளைஞர் ஒருவருடன் செல்போனில் நீண்ட நேரம் பேசியது தெரியவந்தது. அதே செல்போன் எண் சம்பவ இடத்தில் இருந்ததையும் போலீசார் கண்டறிந்தனர் இது குறித்து கேட்ட போது முன்னுக்கு பின் முரணாக பேசிய வசந்தி வசமாக சிக்கினார்.

திருமணம் முடிந்த நாளில் இருந்து மாமியாருக்கும், மாமனாருக்கும் பாடு பார்த்து போதும் போதுமென்றாகிவிட்டது என்ற வசந்தி, மாமியார் தன்னை ஒரு போதும் கவுரமாக நடத்தியதில்லை என்றும் வேலை ஏவிக்கொண்டே இருப்பார், அவரது வீட்டு முற்றத்தையும் சேர்த்து துடைப்பத்தால் சுத்தம் செய்ய கூறுவார் என்றும் தனியாக சமைத்து தரச் சொல்வார் என்றும் தெரிவித்துள்ள வசந்தி, கொஞ்சம் நேரம் கூட வீட்டில் சும்மா இருக்க முடியாது, அவங்க சொன்ன வேலையை செய்யவில்லை என்றால் தாலியை அறுத்து உங்க அம்மா வீட்டுக்கு விரட்டி விட்டுறுவேன்னு அசிங்கமாக திட்டுவார் என்று கூறிஉள்ளார்

இதனால் மாமியார் மீது அளவு கடந்த கோபத்தில் இருந்தேன், இது குறித்து தனது உறவுக்கார இளைஞர் மைக்கல்ராஜிடம் தெரிவித்தேன். மேலும் மாமியாரை தலையில் நாலு சாத்து சாத்தனும்ன்னும் அவன் கிட்ட சொன்னேன், அதன்படி சம்பவத்தன்று இரவு மைக்கேல் ராஜ், தனது மாமியார் கனகாவின் முகத்தில் மிளகாய் பொடியை வீசி, மப்ளர் துண்டால் முகத்தை மறைத்து பிடித்துக் கொண்டதும் , தான் தயாராக எடுத்து வைத்திருந்த விறகு கட்டையை தூக்கிச்சென்று மாமியார் தலையில் ஓங்கி ஓங்கி அடித்ததாக வசந்தி போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும் தன்னை தாலியை அறுப்பேன் என்று மிரட்டியதால் மாமியாரின் கழுத்தில் கிடந்த தாலி சரடை அறுத்து மைக்கேல் கையில் கொடுத்தனுப்பியதாகவும் வசந்தி தெரிவித்துள்ளார்.

இதையடுத்து மருமகள் வசந்தியையும், மண்டலவாடி அடுத்த கவுண்டப்பனூரில் வசித்து வந்த வசந்தியின் உறவுக்கார இளைஞர் மைக்கேல்ராஜையும் கைது செய்த போலீசார். மைக்கேல்ராஜின் வீட்டில் இருந்து , மூதாட்டியிடம் பறித்து சென்ற 4சவரன் தங்க தாலியை ஜோலார்பேட்டை போலீசார் பறிமுதல் செய்தனர். தாக்குதலுக்கு பயன் படுத்தப்பட்ட உருட்டுக்காட்டையும் கைப்பற்றப்பட்டது இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

SHARE

shareshareshareshare

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

பழைய கதைகளை சொல்லி அரசியல் செய்ய நான் வரவில்லை - த.வெ.க தலைவர் விஜய் பேச்சு

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies