தமிழ்நாடு
“என்ன சாக்கடை நாறுது..”அப்புறம்.. நறுமணமா வீசும்..? காங்கிரசார் சாக்கடை குளியல்..!
Apr 16, 2025 01:34 AM
397
“என்ன சாக்கடை நாறுது..”அப்புறம்.. நறுமணமா வீசும்..? காங்கிரசார் சாக்கடை குளியல்..!
சாக்கடைகுளியல் போராட்டம் நடத்தபோவதாக அறிவித்த நெல்லை காங்கிரஸ் கட்சி பிரமுகர்கள் துர்நாற்றம் காரணமாக சட்டையில் மட்டும் சாக்கடையை ஊற்றிக் கொண்டு மாநகராட்சி கூட்ட அரங்கிற்குள் மனு அளிக்க சென்றனர்.
நெல்லை மாநகராட்சிக்குட்பட்ட பாளையங்கோட்டை 32-வது வார்டில் ஜோதிபுரம், நேச நைனார் தெரு, காரிய நைனார் தெரு சந்திப்பில் உள்ள கழிவு நீரோடையின் இரு பக்கமும் தடுப்பு சுவர் உடைந்து கழிவுநீர் கோவில் முன்பாகவும், தெருக்களிலும் வழிந்து ஓடுவதாக கூறப்படுகின்றது. இதனை சரி செய்ய பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை மேற்கொள்ளாத நிலையில் சாக்கடை குளியல் போராட்டம் நடத்தப்போவதாக காங்கிரஸ் கட்சியினர் அறிவித்தனர்.
அதன்படி ஜோதிபுரம் மக்களை அழைத்துக் கொண்டு மனு அளிக்க சென்ற நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கர பாண்டியன் , வாளியில் மூடி போட்டு எடுத்து வரப்பட்ட சாக்கடை நீரில் குளிப்பதாக கூறி சட்டையில் ஊற்றினார். துர் நாற்றம் தாங்க இயலாததால் குளிக்காமல் சட்டையில் மட்டும் தேய்த்துக் கொண்டு வீடியோவுக்கு போஸ் கொடுத்தனர்
அவர்களின் முதுகிற்கு பின்னால் இருந்து முந்திக் கொண்டு வந்த காங்கிரஸ் மூத்த தொண்டர் ஒருவர் ,உணர்ச்சிவசப்பட்டு கப்பில் சாக்கடையை மொத்தமாக அள்ளி அப்படியே தலையில் ஊற்றிக் கொண்டார்
சாக்கடையை ஊற்றிக் கொண்டதால் நாற்றம் தாங்க இயலாமல் வேக வேகமாக சங்கர பாண்டியன் தலைமையில் காங்கிரசார் கூட்ட அரங்கிற்குள் சென்றனர். துர்நாற்றம் அடித்ததால் அங்கிருந்த அதிகாரிகளும் மூக்கை பிடித்துக் கொண்ட நிலையில் சங்கர பாண்டியன் , கழிவு நீரோடையை சரிசெய்யக் கோரி மேயரிடம் மனு ஒன்றை வழங்கினார்.
மேயரும் தன் பங்கிற்கு அதிகாரியை சத்தம் போட்டு விரைவாக சரி செய்ய உத்தரவிட்டார்
காங்கிரஸ் பிரமுகர் சங்கர பாண்டியன் முன் கூட்டியே , அப்பகுதி மக்களுடன் சம்பந்தப்பட்ட துறை அதிகாரியை சந்தித்து மனு அளித்து விட்டதாகவும், பப்ளிசிட்டிக்காக தன் மீது சாக்கடையை அள்ளி பூசிக்கொண்டு நாடகமாடியதாகவும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
விளம்பரமாக இருந்தாலும் சாக்கடையை தங்கள் மீது ஊற்றிக் கொண்டு போராடிய காங்கிரசாரை, மக்கள் வேடிக்கையாக பார்த்துச்சென்றனர்
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu