RECENT NEWS

காட்டுப்பகுதியில்  பதுக்கி வைக்கப்பட்டிருந்த 29 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

சினிமா

இளையராஜா - குட், ராயல்டி ராஜா - பேட், வசூல் ராஜா - அக்லி..! பாடல்கள் காப்புரிமை கிடைக்குமா ?

Apr 16, 2025 01:02 AM

150

இளையராஜா - குட், ராயல்டி ராஜா - பேட், வசூல் ராஜா - அக்லி..!
பாடல்கள் காப்புரிமை கிடைக்குமா ?

இளையராஜா - குட், ராயல்டி ராஜா - பேட், வசூல் ராஜா - அக்லி..!

குட் பேட் அக்லி படத்தில் தனது பாடல்களை பயன்படுத்தியதற்கு 5 கோடி ரூபாய் ராயல்டி கேட்டு இசையமைப்பாளர் இளையராஜா, மைத்ரி மூவி மேக்கர்ஸுக்கு நோட்டீஸ் அனுப்பிய நிலையில், உரிய ஆடியோ நிறுவனங்களிடம் அனுமதி பெற்று பாடல்கள் பயன்படுத்தப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

96 படத்தில் “யமுனை ஆற்றிலே” பாடலை பயன்படுத்தியதற்கு ''பழைய பாடல்களை புதிய படங்களில் பயன்படுத்துவது தவறானது என்றும் புதியதாக பாடலை உருவாக்காமல் பழைய பாடல்களை பயன்படுத்துவது ஆண்மையற்ற செயல்'' எனவும் இளையராஜா கடுமையாக சாடினார்.

இதன் தொடர்ச்சியாக அவரது இசையில் வெளியான பாடலை பயன்படுத்துவோர், இளையராஜாவுக்கு ராயல்டியாக பெருந்தொகை கொடுக்க தொடங்கினர். பணம் வந்து விட்டால் கண்டு கொள்ளாமல் இருப்பார், வரவில்லை என்றால் பஞ்சாயத்து தான்..!

மஞ்சுமெல் பாய்ஸ் படத்தில் கண்மணி அன்போடு காதலன் பாடலுக்காக கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனத்திடம் பணம் செலுத்தி அனுமதி பெற்ற நிலையில், படம் வெளியாகி ஹிட் ஆனதும் நோட்டீஸ் அனுப்பிய இளையராஜா, தனது பங்காக 60 லட்சம் ரூபாய் வரை வசூலித்ததாக கூறப்படுகின்றது. இது குணா படத்திற்கு இசை அமைக்க அவர் பெற்றதைவிட 10 மடங்கு சம்பளம் என்கின்றனர் திரையுலகினர்.

அதே போல லப்பர் பந்து படத்துக்காக “நீ பொட்டு வச்ச தங்க குடம்..” பாடலை குறிப்பிட்ட ஆடியோ நிறுவனத்திடம் அனுமதி பெற்று படத்தில் பயன் படுத்திய நிலையில் இளையராஜாவுக்கும் பெரும் தொகை வழங்கப்பட்டது.

அண்மையில் அகத்தியா படத்தில் தந்தையின் பாடல் தானே என்று “என் இனிய பொன் நிலாவே” பாடலை உரிமம் வைத்திருக்கும் ஆடியோ நிறுவனத்தின் அனுமதி இல்லாமல் யுவன்சங்கர் ராஜா பயன்படுத்தி இருந்தார். இந்த விவகாரத்தில் பாடல் உரிமம் பெற்ற நிறுவனத்துகே சொந்தம் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இளையராஜாவின் தடையில்லா சான்று எடுபடாமல் போனது. இதனால் படத்தில் அந்த பாடலை பயன்படுத்த இயலாமலேயே போய் விட்டது.

இந்த நிலையில் தான் குட் பேட் அக்லி படத்தில் ஒத்தரூபாயும் தாரென்..., நான் தான் சகலகலாவல்லவன்..., என் ஜோடி மஞ்சக்குருவி ..ஆகிய பாடல்களை உரிய ஆடியோ நிறுவனத்திடம் அனுமதி பெற்று பயன்படுத்தி இருப்பதாக கூறப்படுகின்றது. அதனை தணிக்கை சான்றிதழில் பட தயாரிப்பு நிறுவனம் சுட்டிக்காட்டி உள்ளது.

இருந்தாலும் அடங்காத ராயல்டி ராஜா, பாடலில் தனக்கு உரிமை உள்ளது என்று 5 கோடி ரூபாய் ராயல்டி கேட்டு நோட்டீஸ் அனுப்பி இருப்பதாகவும், 7 நாட்களுக்குள் படத்தில் இருந்து தனது பாடல்களை நீக்க வேண்டும் என்று கூறி இருப்பதாகவும் கூறப்படுகின்றது. இது குறித்து விவரித்த பிரபல தயாரிப்பு நிறுவன நிர்வாகி ஒருவர், இளையராஜா படதயாரிப்பு நிறுவனங்களிடம் சம்பளம் பெற்றுக் கொண்டுதான் இசையமத்துள்ளார். அதனால் அந்த பாடலின் ஆடியோ வீடியோ உரிமை எல்லாம் தயாரிப்பாளர்களை சார்ந்தது. அவர்கள் எந்த ஆடியோ நிறுவனத்துக்கு விற்கிறார்களோ அவர்களிடம் தடையில்லா சான்று பெற்றால் போதுமானது என்று நீதிமன்றம் சுட்டிக்காட்டிய பின்னரும் இளையராஜா தனக்கும் பணம் வேண்டும் என்று கேட்பது எப்படி சரியாக இருக்கும் ? என்று கேள்வி எழுப்புகின்றார்.

அதே நேரத்தில் அந்த அற்புதமான பாடலை உருவாக்கியவர் என்ற முறையிலாவது, அவரது பாடலை பயன்படுத்துவோர், இளையராஜாவுக்கு ராயல்டி கொடுக்க வேண்டியது கட்டாயம் அல்ல அவருக்கு வழங்கப்படும் கவுரவம் என்கின்றனர் ராஜாவின் ரசிகர்கள்..!

SHARE

shareshareshareshare

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

பிரதமரின் விஸ்வகர்மா திட்டம்.. கலைஞர் கைவினை திட்டம்.. பயன்பெற செய்ய வேண்டியது..! இரு திட்டங்களின் நோக்கம் என்ன..?

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies