நிலைத் தடுமாறி ரயிலில் சிக்கி நடைபாதையில் தரதரவென இழுத்துச் செல்லப்பட்ட இளைஞரை மீட்ட ஆர்.பி.எப். வீரர்-பதறவைக்கும் காட்சி

0 2362

பஞ்சாப் மாநிலம் பாட்டியாலா ரயில் நிலையத்தில் விரைவு ரயிலில் சிக்கி தரதரவென நடைபாதையில் இழுத்துச் செல்லப்பட்ட இளைஞரை ரயில்வே பாதுகாப்பு படை வீரர் மீட்கும் சிசிடிவி காட்சி வெளியிடப்பட்டுள்ளது.

பாட்டியாலா ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட விரைவு ரயிலில் ஏற முயன்ற இளைஞர் நிலை தடுமாறி சிக்கிக் கொண்டதால் நடைபாதையில் சில அடி தூரத்திற்கு தரதரவென இழுத்துச் செல்லப்பட்டார். இதைக் கண்ட ரயில்வே பாதுகாப்பு படை வீரர் ஓடிச் சென்று இளைஞரை பத்திரமாக மீட்டர்.

நிலைய சிசிடிவியில் பதிவான காட்சியை ரயில்வே பாதுகாப்பு தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.   

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments