​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
போக்சோ வழக்கு - ஒரே பள்ளியில் பணியாற்றும் 10 ஆசிரியர்கள் பணியிட மாற்றம்

Published : Jun 10, 2024 5:42 PM



போக்சோ வழக்கு - ஒரே பள்ளியில் பணியாற்றும் 10 ஆசிரியர்கள் பணியிட மாற்றம்

Jun 10, 2024 5:42 PM

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்றில் மாணவியிடம் உடற்கல்வி ஆசிரியர் பாலியல் துன்புறுத்ததில் ஈடுபட்ட விவகாரம் தொடர்பாக 10 ஆசிரியர்கள் பணியிட இடமாற்றம் செய்யப்பட்டனர்.

கடந்த ஆண்டு நடந்த சம்பவம் தொடர்பாக உடற்கல்வி ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள நிலையில், தலைமை ஆசிரியராக இருந்தவர் உட்பட 6 ஆசிரியர்கள் மீது போக்சோ சட்டப் பிரிவுகளின் கீழ் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில், பாலியல் துன்புறுத்தல் குறித்து வெளியே சொல்லக் கூடாது என தன்னை மிரட்டிய 10 ஆசிரியர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட மாணவி மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்த நிலையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இதையடுத்து, குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட 6 ஆசிரியர்கள் உள்ளிட்ட 10 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாக பள்ளி கல்வித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.