​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
"தேர்தல் முடிவுகள் ஜனநாயகத்தின் மீதான மக்களின் நம்பிக்கையை காட்டுகிறது" - பிரதமர் மோடி

Published : Mar 02, 2023 10:07 PM

"தேர்தல் முடிவுகள் ஜனநாயகத்தின் மீதான மக்களின் நம்பிக்கையை காட்டுகிறது" - பிரதமர் மோடி

Mar 02, 2023 10:07 PM

மூன்று மாநில தேர்தல் முடிவுகள், ஜனநாயகத்தின் மீதான மக்களின் நம்பிக்கையை வெளிப்படுத்துவதாக பிரதமர் மோடி கூறினார்.

வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, நாகாலாந்து, மேகாலயாவில் பாஜகவும் அதன் கூட்டணி கட்சிகளும் வெற்றி பெற்றுள்ளன.

இந்த நிலையில், டெல்லியிலுள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் தொண்டர்களை சந்தித்த பிரதமர் மோடி, மூன்று மாநில மக்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக தொண்டர்கள் தங்களது மொபைல் டார்ச்சை ஒளிர விடுமாறு கேட்டுக் கொண்டார்.

மோடி, மோடி என முழங்கியவாறே தொண்டர்களும் தங்களது மொபைல் போனில் டார்ச்சை ஒளிரவிட்டனர். பின்னர் பேசிய பிரதமர் மோடி இத்தேர்தல் முடிகள் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதை காணமுடிகிறது என்றும், புதிய சிந்தனையை உருவாக்கும் என்றும் கூறினார். மூன்று மாநில மக்களுக்கும் தனது நன்றியை தெரிவித்துக்கொள்வதாகவும் அவர் கூறினார்.