​​
Polimer News
Polimer News Tamil.

புத்தாண்டையொட்டி தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை..!

நாடு முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்டியிருந்த நிலையில், தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன. சென்னை சாந்தோம் பேராலயத்தில் நடைபெற்ற நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனையில் திரளானோர் பங்கேற்றனர். பெண்கள், குழந்தைகள் என குடும்பத்தினருடன் அங்கு திரண்டிருந்தனர். நாகை மாவட்டம் வேளாங்கண்ணி தேவாலயத்தில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தணையில்...

குடியுரிமை சட்டம் கொண்டுவர மாநில சட்டப்பேரவைகளுக்கு அதிகாரம் இல்லை - மத்திய சட்ட அமைச்சர்

குடியுரிமை தொடர்பாக சட்டம் கொண்டுவர மாநில சட்டப்பேரவைகளுக்கு அதிகாரம் இல்லை என்று மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், குடியுரிமை தொடர்பாக எந்த சட்டம் நிறைவேற்றவும் நாடாளுமன்றத்துக்கு மட்டுமே அதிகாரம் உள்ளதாக விளக்கம் அளித்தார்....

9 வாக்குச் சாவடிகளில் இன்று மறுவாக்குப் பதிவு

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் ஒன்பது வாக்குச் சாவடிகளில் இன்று மறுவாக்குப் பதிவு நடைபெறுகிறது. நேற்றுமுன்தினம் நடைபெற்ற கிராம ஊராட்சித் தலைவர் மற்றும் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் தேர்தல்களில் சில வாக்குச் சாவடிகளில், வாக்குச் சீட்டுகள் மாற்றி வழங்கப்பட்டன. அவ்வாறு வழங்கப்பட்ட வாக்குச்...

புத்தாண்டையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்

ஆங்கிலப் புத்தாண்டையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. அதிகாலையிலேயே ஏராளமானோர் கோவில்களுக்கு குடும்பத்தினருடன் வந்து வழிபட்டனர். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் புத்தாண்டை முன்னிட்டு அதிகாலை ஒரு மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. அதனை தொடர்ந்து விஸ்வரூப தீபாராதனையும், உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது. புத்தாண்டை...

புத்தாண்டையொட்டி குடியரசுத் தலைவர் - பிரதமர் வாழ்த்து

2020 புத்தாண்டையொட்டி குடியரசுத் தலைவர்- பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள செய்தியில், அமைதியான, அக்கறையான, கருணையான சமுதாயத்தை உருவாக்க புத்தாண்டில் உறுதி எடுத்துக் கொள்வோம் என்று குறிப்பிட்டுள்ளார். வலிமையான, வளமையான இந்தியாவை உருவாக்குவதற்கான...

இணையதளம் மூலம் குடியுரிமை வழங்க ஏற்பாடு?

குடியுரிமை திருத்த சட்டத்தை சில மாநிலங்கள் எதிர்ப்பதால், இணையதள நடைமுறையை அமல்படுத்தி குடியுரிமை வழங்க மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. குடியுரிமை சட்டத்தை நடைமுறைப்படுத்த மாட்டோம் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் அறிவித்துள்ளனர். இந்நிலையில் செய்தியாளர்களிடம்...

இந்தோனேஷியாவில் மிகப்பெரிய எரிமலை சீற்றம்

இந்தோனேசியாவில் உள்ள மிகப்பெரிய எரிமலை வெடித்து சிதறத் தொடங்கியுள்ளது. லம்புங் மாகாணத்தில் இருக்கும் அனக் ரகடவ் (Anak Krakatau) எரிமலை கடந்த ஆண்டு வெடித்து சிதறியபோது, கடலில் 5 மீட்டர் உயரத்துக்கு சுனாமி அலை ஏற்பட்டது. இதில் 430 பேர் பலியாகினர். இந்நிலையில்...

5,200 கி.மீ தொலைவு இடம்பெயர்ந்து வந்த ஆட்கொல்லி திமிங்கலங்கள்

வடமேற்கு இத்தாலியின் மெசினாவில் கடலில் மூன்று ஆட்கொல்லி திமிங்கலங்கள் நீந்து செல்லும் காட்சிகள் வெளியாகியுள்ளது. 25 வயதாகும் சிமோன் வர்தூலி எனும் மீனவர் ஒருவர், கடலில் திமிங்கலங்களின் துடுப்புகள் வெளிப்படுவதைக் கண்டு, படகில் சென்று தண்ணீரில் நீந்தி செல்லும் திமிங்கலங்களை விடியோவாக எடுத்துள்ளார். டிசம்பர்...

ரஷ்ய விமான நிலையத்தில் பயணிகளுக்கு Dog Theropy

ரஷ்யாவின் மாஸ்கோவில் விமான நிலையத்தில் பயணத்திற்கு செல்வதற்கு முன்பு பயணிகளின் மன நிலையை சீராக்கும் வகையில் அவர்களுக்கு டாக் தெரபி (dog theropy) வழங்கப்படுகிறது. டொமோடெடோவோ (Domodedovo) விமான நிலையம் 'யுனைடெட் அனிமல் தெரபிஸ்ட்ஸ்' (United Animal Therapists) சங்கத்துடன் இணைந்து, பயணம்...

அசாமில் சுற்றுலாப் பயணிகள் வரத்து குறைந்ததால் ஆயிரம் கோடி இழப்பு

திருத்தப்பட்ட குடியுரிமைச் சட்டத்திற்கு எதிரான வன்முறை போராட்டங்களால் அசாமிற்கு சுற்றுலாப் பயணிகள் வருகை குறைந்ததால், ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டதாக அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அசாமில் வன்முறை, தீவைப்பு சம்பவங்கள் ஏற்பட்டதை அடுத்து ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு தற்போது...