6 வயதுடைய இரட்டை சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை.. இளைஞருக்கு 67ஆண்டுகள் சிறை

0 3114
6 வயதுடைய இரட்டை சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை.. இளைஞருக்கு 67ஆண்டுகள் சிறை

திருப்பூர் அருகே ஆறு வயது உடைய இரட்டை சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபருக்கு 67 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சேவூர் பகுதியில் கடந்த 2020ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஆறு வயதுடைய இரட்டை குழந்தைகள் வீட்டில் தனியாக இருந்த போது அதே பகுதியை சேர்ந்த பிரகாஷ் என்பவன், குழந்தைகளுக்கு சாக்லெட் வாங்கி கொடுத்து தன் வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு அளித்துள்ளான்.

இதுதொடர்பாக சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் பிரகாஷ் கைது செய்யப்பட்டான். இந்த வழக்கை விசாரித்த திருப்பூர் மாவட்ட மகிளா நீதிமன்ற நீதிபதி சுகந்தி பிரகாஷுக்கு 67 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 40 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments