​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஒரே பதவிக்கு இருவர் வெற்றிப்பெற்றதாக அடுத்தடுத்து அறிவிப்பு

Published : Jan 03, 2020 2:02 PM

ஒரே பதவிக்கு இருவர் வெற்றிப்பெற்றதாக அடுத்தடுத்து அறிவிப்பு

Jan 03, 2020 2:02 PM

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே ஒரு ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு இருவர் வெற்றிப்பெற்றதாக அதிகாரிகள் அடுத்தடுத்து சான்றிதழ் அளித்ததால் குழப்பம் ஏற்பட்டது.

சங்கராபுரம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு தேவி மற்றும் பிரியதர்ஷினி ஆகியோர் போட்டியிட்டனர். நேற்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையின் போது 310 வாக்குகள் வித்தியாத்தில் தேவி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு சான்றிதழ் அளிக்கப்பட்டது.

அதை எதிர்த்து பிரியதர்ஷினி தரப்பு வாக்கு வாதத்தில் ஈடுபட்டது. மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் வாக்கு எண்ணும் மையத்திற்கு நள்ளிரவில் வந்த பின்னர் வாக்கு எண்ணிக்கை சரிப்பார்க்கப்பட்டது.

அதையடுத்து, அதிகாலை 5.30 மணியளவில் 57 வாக்குகள் வித்தியாசத்தில் பிரியதர்ஷினி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.