​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தீ விபத்தில் உயிரிழந்த வீரரின் குடும்பத்திற்கு ஆம் ஆத்மி ரூ.1 கோடி நிதியுதவி

Published : Jan 03, 2020 8:54 AM

தீ விபத்தில் உயிரிழந்த வீரரின் குடும்பத்திற்கு ஆம் ஆத்மி ரூ.1 கோடி நிதியுதவி

Jan 03, 2020 8:54 AM

டெல்லியில் ஏற்பட்ட தீவிபத்தின் போது தீயை அணைக்கும் பணியில் உயிரிழந்த தீயணைப்பு வீரர் அமித் பாலியானின் குடும்பத்திற்கு ஆம் ஆத்மி அரசு 1 கோடி ரூபாய் உதவித்தொகை வழங்கியுள்ளது.

டெல்லியின் பீராகரி பகுதியில் உள்ள தொழில்பேட்டையின் கிடங்கு ஒன்றில் பயங்கர தீ விபத்து நேரிட்டது. தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடிய போது பலர் உள்ளே சிக்கி உயிரைக் காக்க கூக்குரலிட்டனர். கட்டடத்தில் சிக்கியவர்களை மீட்க போராடிய தீயணைப்பு வீரர்களில் 28 வயதான இளம் வீரர் அமித் தீயில் சிக்கி உயிரிழந்தார்.

புதிதாக திருமணம் ஆன இளம் வீரரின் உயிர் தியாகம் குறித்து அதிர்ச்சி வெளியிட்ட முதல்வர் கெஜ்ரிவால், அவரது குடும்பத்தினருக்கு 1 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கியிருக்கிறார்.