​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
குடியுரிமை திருத்தச் சட்ட ஆதரவுப் பிரச்சாரம் - பொறுப்பாளர்களை அறிவித்தது பாஜக

Published : Jan 02, 2020 2:41 PM

குடியுரிமை திருத்தச் சட்ட ஆதரவுப் பிரச்சாரம் - பொறுப்பாளர்களை அறிவித்தது பாஜக

Jan 02, 2020 2:41 PM

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதவான பிரச்சாரத்திற்கு மாநில வாரியான பொறுப்பாளர்களை பாஜக தலைவர் அமித் ஷா அறிவித்துள்ளார். 

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்களை எதிர்கொள்ள, வரும் 5 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை நாடு தழுவிய ஆதரவு பிரச்சாரத்தை மேற்கொள்ள பாஜக திட்டமிட்டுள்ளது.  அதற்காக தமிழகம், புதுவை, கேரளம், ஆந்திரா மற்றும் தெலுங்கானாவிற்கு ரவீந்திர ராஜு பொறுப்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். பலத்த எதிர்ப்பு நிலவும் மேற்கு வங்கத்திற்கு  ஹேமந்த் பிஸ்வ சர்மா மற்றும் ராகுல் சின்கா ஆகியோர் தலைமை வகிப்பார்கள்.

இந்த பிரச்சாரத் திட்டம் மூலம் சுமார் 3 கோடி குடும்பங்களிடம் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவான பிரச்சாரம் சென்றடையும் என்று பாஜக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சமூக வலைதளங்களில் பாஜக ஏற்கனவே தனது பிரச்சாரத்தை துவக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.