​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஆழியார் அணையில் இருந்து பாசனத்திற்கு நீர் திறப்பு

Published : Jan 01, 2020 5:30 PM

ஆழியார் அணையில் இருந்து பாசனத்திற்கு நீர் திறப்பு

Jan 01, 2020 5:30 PM

கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆழியார் அணையில் இருந்து பழைய ஆயக்கட்டு பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின்படி ஆழியாறு அணையின் மின் உற்பத்தி நிலையம் வழியாக பழைய ஆயக்கட்டு பாசனத்திற்கு 2ம் போக பயிர் சாகுபடிக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது.

தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், எம்எல்ஏ கஸ்தூரி வாசு, அதிகாரிகள் மற்றும் விவசாயிகள், திறந்துவிடப்பட்ட தண்ணீரை மலர் தூவி வரவேற்றனர். இன்று முதல் ஏப்ரல் 15ஆம் தேதி வரை 106 நாட்களுக்கு திறந்து விடப்படும் 940 மில்லியன் கனஅடி தண்ணீரால் ஆனைமலை சுற்றுவட்டாரத்தில் உள்ள 6 ஆயிரத்து 400 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும்.