​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கரூர் மாயனூர் கதவணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 13,733 கன அடியாக அதிகரிப்பு..

Published : Oct 24, 2024 12:24 PM

கரூர் மாயனூர் கதவணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 13,733 கன அடியாக அதிகரிப்பு..

Oct 24, 2024 12:24 PM

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக கரூர் மாவட்டம் மாயனூர் கதவணைக்கு வரும் நீர்வரத்து விநாடிக்கு 13ஆயிரத்து 733 கன அடியாக உயர்ந்துள்ளது.

இதில் விநாடிக்கு 12ஆயிரத்து 213 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றிலும், தென்கரை வாய்க்காலில் 700 கன அடியும், கட்டளை மேட்டு வாய்க்காலில் 400 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

புதிய கட்டளை மேட்டு வாய்க்காலில் விநாடிக்கு 400 கன அடியும், கிருஷ்ணராயபுரம் வாய்க்காலில் 20 கன அடி தண்ணீர் திறக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.