​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கோயம்புத்தூர் சாய்பாபா காலனி பேருந்து நிறுத்தம் பகுதியில் பெண்களை போட்டோ எடுத்த போலீஸ் சஸ்பென்ட்

Published : Oct 22, 2024 12:33 PM

கோயம்புத்தூர் சாய்பாபா காலனி பேருந்து நிறுத்தம் பகுதியில் பெண்களை போட்டோ எடுத்த போலீஸ் சஸ்பென்ட்

Oct 22, 2024 12:33 PM

கோயம்புத்தூர் சாய்பாபா காலனி பேருந்து நிறுத்தம் பகுதியில் கடந்த 18ஆம் தேதி சாலையில் சென்ற பெண்களை செல்போனில் போட்டோ எடுத்த புகாரில் சாய்பாபா காலனி காவல் நிலைய காவலர் பாலமுருகன் என்பவரை பணியிடை நீக்கம் செய்து மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.

போட்டோ எடுப்பதை பார்த்து கேள்வி எழுப்பிய பொதுமக்களை தாக்கிவிட்டு பாலமுருகன் தப்ப முயன்றதாக கூறப்படும் நிலையில், இதுகுறித்த புகாரில் ஏற்கனவே பணியிட மாற்றம் செய்யப்பட்டிருந்தார்.