​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கோவையில் பெண்ணை வீடியோ எடுத்த நபரை பிடித்து போலீசில் ஒப்படைத்த பொதுமக்கள்

Published : Oct 19, 2024 11:43 AM

கோவையில் பெண்ணை வீடியோ எடுத்த நபரை பிடித்து போலீசில் ஒப்படைத்த பொதுமக்கள்

Oct 19, 2024 11:43 AM

கோவை சாய்பாபா காலனி பேருந்து நிறுத்தம் அருகே தனியாகச் சென்ற பெண்ணை அத்துமீறி செல்ஃபோனில் வீடியோ எடுத்ததாகக் கூறி போக்குவரத்து காவலர் பாலமுருகன் என்பவரை, அங்கிருந்தவர்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

பாலமுருகன் சீருடையில் இல்லாததால் போலீஸார் விசாரணைக்குப் பிறகே அவர் போக்குவரத்துக் காவலர் எனத் தெரியவந்தது. பாலமுருகனின் செல்ஃபோனை பறிமுதல் செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.