​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தனியார் விடுதிக்கு சீல் வைத்த வருவாய்த்துறை அதிகாரிகள்

Published : Oct 18, 2024 12:22 PM

தனியார் விடுதிக்கு சீல் வைத்த வருவாய்த்துறை அதிகாரிகள்

Oct 18, 2024 12:22 PM

உரிமத்தை புதுப்பிக்காமல் இயங்கியதாக கும்பகோணத்தில் உள்ள ரஃபீஸ் என்ற தனியார் தங்கும் விடுதிக்கு வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.

கடந்த ஜூலையில் 17வயதுடைய கல்லூரி மாணவ, மாணவி ஜோடி ரஃபீஸ் விடுதியில் அறை எடுத்து தங்கியதாகவும், அப்போது உடல்நலக்குறைவு ஏற்பட்ட அம்மாணவி உயிரிழந்தாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து கும்பகோணம் வட்டாட்சியர் விளக்கம் கேட்ட நிலையில், அளிக்கப்பட்ட கெடுவுக்குள் விடுதி உரிமையாளர் எந்த விளக்கமும் அளிக்காததாலும், உரிமம் தொடர்பான மனு தள்ளுபடி செய்யப்பட்டதாலும் சீல் வைக்கப்பட்டுள்ளது.