​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சென்னை அருகே மதுபோதையில் தின்பண்டங்களை சாப்பிட்டு பணம் தர மறுத்து தகராறு செய்த இளைஞர் கைது

Published : Oct 01, 2024 11:02 AM

சென்னை அருகே மதுபோதையில் தின்பண்டங்களை சாப்பிட்டு பணம் தர மறுத்து தகராறு செய்த இளைஞர் கைது

Oct 01, 2024 11:02 AM

சென்னை பெரவள்ளூர் மதுபோதையில் பேக்கரி கடைக்கு வந்து தின்பண்டங்களை சாப்பிட்டு விட்டு அதற்கான பணம் தர மறுத்து தகராறில் ஈடுபட்டு அங்கிருந்த பொருட்களை தெருவில் வீசி எறிந்ததாகக் கூறி லோகேஷ் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

சுந்தரமூர்த்தி என்பவர் நடத்தி வரும் அந்த பேக்கரியில் தின்பண்டங்கள், கடாயில் இருந்த எண்ணெய் உள்ளிட்டவற்றை கீழே கொட்டியதுடன், வாடிக்கையாளர்கள் மீது லோகேஷ் சோடா பாட்டில்களை வீசியதாகவும் போலீசார் தெரிவித்தனர்.