​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கோயம்புத்தூரில் விதிகளை மீறிய கல்லூரி மாணவர்களின் பைக்குகளுக்கு அபராதம் மற்றும் போலீஸார் எச்சரிக்கை

Published : Oct 01, 2024 7:08 AM

கோயம்புத்தூரில் விதிகளை மீறிய கல்லூரி மாணவர்களின் பைக்குகளுக்கு அபராதம் மற்றும் போலீஸார் எச்சரிக்கை

Oct 01, 2024 7:08 AM

கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் விதிகளை மீறி இருசக்கர வாகனங்களை ஓட்டி வந்த 10க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்களுக்கு போலீசார் அபராதம் விதித்தனர்.

முறையான ஆவணங்கள் இல்லாதது, பக்கவாட்டுக் கண்ணாடிகள் இல்லாதது, ஹெல்மெட் அணியாதது உட்பட பல்வேறு விதிமீறல்களுக்காக 35 ஆயிரம் ரூபாய்க்கு மேல் அபராதம் விதிக்கப்பட்டது. மாணவர்கள் என்பதால் எவ்வித சலுகையும் காட்டப்பட மாட்டாது எனவும் போலீஸார் எச்சரித்து அனுப்பினர்.