​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நெல்லையில் வாரிசு சான்றிதழ் வழங்க ரூ.4,000 லஞ்சம் வாங்கிய இளநிலை உதவியாளர் கைது

Published : Sep 27, 2024 7:11 PM

நெல்லையில் வாரிசு சான்றிதழ் வழங்க ரூ.4,000 லஞ்சம் வாங்கிய இளநிலை உதவியாளர் கைது

Sep 27, 2024 7:11 PM

நெல்லை மாவட்டம் பணகுடியைச் சேர்ந்த சிவபாலன் என்பவரிடம் 4 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக, ராதாபுரம் வட்டாட்சியர் அலுவலக இளநிலை உதவியாளர் அஜித் சண்முகநாதன் கைது செய்யப்பட்டார்.

தாத்தா இறந்து போனதால் வாரிசு சான்றிதழ் கோரி விண்ணப்பித்த சிவபாலனிடம் பணம் பெற்ற போது அஜித் சண்முகநாதனை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். இதைத் தொடர்ந்து, வட்டாட்சியர் அலுவலகத்திலும் போலீசார் சோதனை நடத்தினர்.