​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
குஜராத்தில் வெள்ளத்தில் சிக்கிய தமிழக பயணிகள் சென்ற பேருந்து... ஆன்மீகச் சுற்றுலா சென்ற 28 பயணிகள் பத்திரமாக மீட்பு

Published : Sep 27, 2024 6:16 AM

குஜராத்தில் வெள்ளத்தில் சிக்கிய தமிழக பயணிகள் சென்ற பேருந்து... ஆன்மீகச் சுற்றுலா சென்ற 28 பயணிகள் பத்திரமாக மீட்பு

Sep 27, 2024 6:16 AM

தமிழகத்திலிருந்து ஆன்மீகச் சுற்றுலாவாக 28 பயணிகள் சென்ற தனியார் பேருந்து, குஜராத்தில் ஆற்று வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்ட நிலையில், தேசிய பேரிடர் மீட்புப்படையால் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

பாவ்நகர் மாவட்டத்தில் உள்ள நிஷ்கலங்க் மகாதேவ் கோயிலுக்கு பயணிகள் சென்றபோது, அங்குள்ள மாலேஸ்ரீ ஆற்றின் தரைப்பாலத்தை கடக்க முயன்ற பேருந்து வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டது.

தகவல் அறிந்து துணை ராணுவப்படையினர் 8 பேர் சிறிய லாரியில் சென்று, ஏணி மூலம் பயணிகளை கீழே இறக்கிய நிலையில், லாரியையும் வெள்ளம் சூழ்ந்ததால் அனைவரும் வெளியே வரமுடியாமல் சிக்கிக் கொண்டனர்.

பின்னர், பைபர் படகுகளில் சென்ற தேசிய பேரிடர் மீட்புப்படையினர் அனைவரையும் மீட்டதாக போலீசார் தெரிவித்தனர். இதனால் 8 மணிநேரமாக வெள்ளத்திற்கு நடுவே பேருந்தில் தவித்த பயணிகள் வெளியே வந்தனர். பயணிகள் அனைவரும் மீட்கப்பட்டு விட்டதாக பாவ்நகர் மாவட்ட ஆட்சியர் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.