​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
எச்சரிக்கையை மீறி பேனரில் இடம் பெற்ற வன்முறை வாசகம்.. கல்லூரி மாணவர் உள்ளிட்ட 3 பேர் அதிரடி கைது..!

Published : Sep 11, 2024 8:04 PM

எச்சரிக்கையை மீறி பேனரில் இடம் பெற்ற வன்முறை வாசகம்.. கல்லூரி மாணவர் உள்ளிட்ட 3 பேர் அதிரடி கைது..!

Sep 11, 2024 8:04 PM

போலீசாரின் எச்சரிக்கையை மீறி, சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் திருமணத்திற்காக வைக்கப்பட்ட ஃப்ளக்ஸ் பேனரில் "தலைமை ஆணையிட்டால் தலைகள் சிதைக்கப்படும்" என்ற வாசகம் வன்முறையை தூண்டும் விதமாக உள்ளதாகக்கூறி, அதை வைத்த கல்லூரி மாணவர் முத்துக்குமார், வடிவமைத்த இளஞ்செழியன் மற்றும் அச்சிட்ட சத்ரு ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதே போல், மானாமதுரையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு "வெறுக்கும் கூட்டம் வேடிக்கை பார்க்கட்டும்" என அச்சிட்டு ஃப்ளக்ஸ் வைத்த ரவிசங்கர், வடிவேல் ஆகியோர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.