​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கரூரில் தி.மு.க. நிர்வாகியை தாக்கிய புகாரில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர்க்கு நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன்

Published : Aug 30, 2024 11:14 AM

கரூரில் தி.மு.க. நிர்வாகியை தாக்கிய புகாரில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர்க்கு நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன்

Aug 30, 2024 11:14 AM

சாலை அமைக்கும் பணியின்போது ஏற்பட்ட தகராறில் திமுக நிர்வாகியை தாக்கிய புகாரில் கைது செய்யப்பட்ட கரூர் மாவட்டம், வெள்ளியணை ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சிவக்குமாரை 15 நாட்கள் நிபந்தனை ஜாமீனில் விடுவித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தனக்கு சொந்தமான நிலத்தில் சிமெண்ட் சாலை போட ஒப்பந்ததாரரிடம் எதிர்ப்பு தெரிவித்த தன்னை, சிவக்குமார் தகாத வார்த்தைகள் பேசி கைகளால் தாக்கியதுடன், கொலை மிரட்டல் விடுத்ததாக லோகநாதன் என்பவர் அளித்த புகாரில் சிவக்குமார் கைது நேற்று செய்யப்பட்டார். தினசரி நீதிமன்றத்தில் வந்து கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் சிவக்குமாருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.