​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடல் கொள்ளையர்கள் தாக்குதல்.. மீன்பிடி வலைகளை அறுத்து கொள்ளையடித்துச் சென்றதாகத் தகவல்

Published : Aug 29, 2024 3:29 PM

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடல் கொள்ளையர்கள் தாக்குதல்.. மீன்பிடி வலைகளை அறுத்து கொள்ளையடித்துச் சென்றதாகத் தகவல்

Aug 29, 2024 3:29 PM

நாகப்பட்டினம் மாவட்டம் ஆறுகாட்டுத்துறையைச் சேர்ந்த 5 மீனவர்கள், வேதாரண்யம் கடல் பகுதியில் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது, இலங்கையைச் சேர்ந்த கடல் கொள்ளையர்கள் மீன்பிடி வலைகளை அறுத்து அவற்றை கொள்ளையடித்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.

வேதாரண்யம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் மீது கடந்த ஒரு மாதத்தில் நான்காவது முறையாக இலங்கை கடல் கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தி வலைகள் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்துள்ளதாக, மீனவர்கள் தெரிவித்தனர்.