​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தொடர்ச்சியாக 3 ஆண்டுகள்.. மருத்துவ மாணவர்களை உருவாக்கும் அரசுப்பள்ளி..!

Published : Aug 25, 2024 8:22 AM

தொடர்ச்சியாக 3 ஆண்டுகள்.. மருத்துவ மாணவர்களை உருவாக்கும் அரசுப்பள்ளி..!

Aug 25, 2024 8:22 AM

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள அல்லிநகரம் அரசுப் பள்ளியில் படித்த மாணவர்கள் அரசின் 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் தொடர்ந்து 3ம் ஆண்டாக மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ள நிலையில், இரு மாணவியரையும் பள்ளிக்கு அழைத்து ஆசிரியர்கள் பாராட்டினர்.

பள்ளியின் முன்னாள் கணித ஆசிரியர் பாலமுருகன் கூறுகையில், அல்லிநகரம் அரசுப் பள்ளியிலிருந்து கடந்த இரண்டு ஆண்டுகளில் தலா ஒரு மாணவரும், இந்த ஆண்டு தாணு மற்றும் ராஜேஸ்வரி ஆகிய இரு மாணவியரும் மருத்துவப்படிப்பில் சேர்ந்துள்ளனர் என்றும், வரும் ஆண்டிலும் மருத்துவப்படிப்பில் சேர மாணவர்கள் தயாராகி வருகின்றனர் என்றும் தெரிவித்தார்.