​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
வங்கக்கடல் தண்ணீரை விட திராவிட கட்சிகளிடம் அதிக பணம் உள்ளது: அண்ணாமலை

Published : Aug 23, 2024 8:10 AM

வங்கக்கடல் தண்ணீரை விட திராவிட கட்சிகளிடம் அதிக பணம் உள்ளது: அண்ணாமலை

Aug 23, 2024 8:10 AM

வங்கக்கடலில் உள்ள தண்ணீரை விட திராவிட கட்சிகளிடம் அதிக பணம் உள்ளதாகவும், ஒரு முறை ஆட்சிக்கு வந்துவிட்டு போனால் 20 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு அவர்கள் பணத்தை கொள்ளையடிப்பதாகவும் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

மதுரையில் பா.ஜ.க. சார்பில் நடைபெற்ற பட்ஜெட் விளக்கப் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், மிகப்பெரிய ஆளுமைகளான எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் கட்சிக்கு ஒரு கோடி பேர் தான் மக்களவை தேர்தலில் வாக்களித்த நிலையில், பா.ஜ.க கூட்டணி அவர்களை விட 20 லட்சம் வாக்குகள் தான் குறைவாக பெற்றதாக கூறினார்.

பா.ஜ.க.வை தி.மு.க. எதிரியாக ஏற்றுக்கொண்டுள்ளதாகவும், தகுதியான எதிரிகள் எப்போதும் மதிக்கப்படுவார்கள் என்பதற்கு கலைஞர் நூற்றாண்டு நாணய வெளியீட்டு விழாவே சாட்சி என்றும் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.