​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மதுபோதையில் கார் ஓட்டிவந்தவரிடம் ரூ.7,000 லஞ்சம் பெற்ற 2 போலீசார் பணியிடை நீக்கம்

Published : Aug 11, 2024 7:03 AM

மதுபோதையில் கார் ஓட்டிவந்தவரிடம் ரூ.7,000 லஞ்சம் பெற்ற 2 போலீசார் பணியிடை நீக்கம்

Aug 11, 2024 7:03 AM

திருப்பூர், திருமுருகன்பூண்டி காவல் நிலைய சிறப்பு எஸ்.ஐ மருதப்பபாண்டியன் மற்றும் ஆயுதப்படை காவலர் குணசுதன் இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

கோவை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இவர்கள், காரை ஓட்டி வந்தவர் மதுபோதையில் இருந்ததாகவும், அவரிடம் 7 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிக்கொண்டு, விலை உயர்ந்த ஆப்பிள் இயர்பட்ஸ் உள்ளிட்டவற்றை பறித்துக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

புகாரின் பேரில், இருவரையும் பணியிடை நீக்கம் செய்து மாநகர காவல் ஆணையர் லட்சுமி உத்தரவிட்டார்.