​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
புதிய வீட்டிற்கு மின் இணைப்பு கொடுக்க ரூ.4,000 லஞ்சம் வாங்கிய உதவி செயற்பொறியாளர், வணிக ஆய்வாளர் கைது

Published : Aug 09, 2024 7:46 AM

புதிய வீட்டிற்கு மின் இணைப்பு கொடுக்க ரூ.4,000 லஞ்சம் வாங்கிய உதவி செயற்பொறியாளர், வணிக ஆய்வாளர் கைது

Aug 09, 2024 7:46 AM

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி துணை மின் நிலையத்தின் உதவி செயற்பொறியாளர் கணேஷ் குமாரையும், வணிக ஆய்வாளர் முத்துவேலையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

புதிய வீட்டிற்கு மின் இணைப்பு கொடுக்க 4,000 ரூபாய் லஞ்சம் கேட்பதாக ராஜநாதன் என்பவர் அளித்த புகாரின் பேரில், அவர் மூலம் தாங்கள் கொடுத்து அனுப்பிய ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை வாங்கியபோது, இருவரையும் கையும் களவுமாக கைது செய்ததாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்தனர்.