​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
வானதி சீனிவாசன் குறித்து அவதூறு- இருவருக்கு தலா ரூ 10,000 அபராதம்

Published : Jul 26, 2024 7:47 AM

வானதி சீனிவாசன் குறித்து அவதூறு- இருவருக்கு தலா ரூ 10,000 அபராதம்

Jul 26, 2024 7:47 AM

பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் குறித்து சமூக வலைதளங்கள் மற்றும் பொது வெளியில் அவதூறு பரப்பியதாக தொடரப்பட்ட வழக்கில்  சென்னையை சேர்ந்த பாலசுப்ரமணிய ஆதித்தன் மற்றும் சங்கரநாராயணன் ஆகிய இருவர் குற்றவாளிகள் என்று சைதாப்பேட்டை நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

7 ஆண்டுகள் கழித்து  அளிக்கப்பட்ட இந்தத்  தீர்ப்பில், இருவருக்கும் தலா 10 ஆயிரம் ரூபாய்  அபராதம் விதித்தும், அபராதம் செலுத்த தவறினால்  6 மாதம் சிறை தண்டனை வழங்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குற்றவாளிகளின் வயதை கருத்தில் கொண்டும், அவர்கள் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியதன் அடிப்படையிலும், இருவரும்  ஒருநாள் மட்டும் நீதிமன்றத்தில் காவலில் வைக்கப்பட்டனர்.