​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நாளை கூடுகிறது நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர்.. சுமுகமாக நடத்த மத்திய அரசு தரப்பில் அழைப்பு

Published : Jul 21, 2024 7:05 PM

நாளை கூடுகிறது நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர்.. சுமுகமாக நடத்த மத்திய அரசு தரப்பில் அழைப்பு

Jul 21, 2024 7:05 PM

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை சுமூகமாக நடத்துவது தொடர்பாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் டெல்லியில் அனைத்து கட்சிக் கூட்டம் நடைபெற்றது.

மக்களவை துணை சபாநாயகர் பதவியை எதிர்க்கட்சிகளுக்கு வழங்க வேண்டும், நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் பற்றி நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தின.

பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க ஐக்கிய ஜனதா தளமும், ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியும் வலியுறுத்தின.

ஆந்திராவிற்கு கூடுதல் நிதி ஒதுக்க தெலுங்கு தேசம் சார்பில் வலியுறுத்தப்பட்டது. எந்த விஷயத்தையும் விவாதிக்க அரசு தயார் என பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டது.