​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சென்னையில் இருந்து கோவை நோக்கி சென்ற தனியார் பேருந்தில் தீ

Published : Jul 18, 2024 12:56 PM

சென்னையில் இருந்து கோவை நோக்கி சென்ற தனியார் பேருந்தில் தீ

Jul 18, 2024 12:56 PM

சென்னையில் இருந்து கோவை நோக்கி சென்ற தனியார் பேருந்து ஈரோடு மாவட்டம் சித்தோடு தேசிய நெடுஞ்சாலையில் தீப்பிடித்து முழுவதுமாக எரிந்தது.

15 பயணிகளுடன் சென்ற பேருந்தின் அடிப்பகுதியில் இருந்து அதிகாலை 4. 40 மணியளவில் திடீரென்று புகை வந்ததை அறிந்த ஓட்டுநர் பேருந்தை உடனே நிறுத்தி பயணிகளை கீழே இறக்கினார்.

அந்த சமயத்தில் திடீரென பேருந்து முழுவதும் தீப்பற்றி எரிந்தது. தீ விபத்து குறித்து சித்தோடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.